fbpx

பள்ளி பருவ காதல்..!! குறுக்கே வந்த கவுசிக்..!! ரூட்டை மாற்றிய இளம்பெண்..!! ரவுண்டு கட்டி வெட்டி சாய்த்த கும்பல்..!!

சென்னையை அடுத்த புழல் அருகே லட்சுமிபுரம் குமரன் தெருவில் வசித்து வந்த சுதா சந்தர் என்பவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர், நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் இளம்பெண்ணுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த 4 பேர் கொண்ட கும்பல், சுதா சந்தரை சரமாரியாக வெட்டி விட்டுத் தப்பி சென்றது. ரத்தவெள்ளத்தில் மிதந்த சுதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதையடுத்து, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சுதா சங்கருடன் வந்த இளம்பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அந்த பெண், ஆவடி வெள்ளாச்சேரியை சேர்ந்த ராகவி என்பதும் வசந்த் என்பவரோடு திருமணமாகி ஒன்றரை வயதில் குழந்தை உள்ளதும் தெரியவந்தது. சுதா சந்தரை கொலை செய்தவர்கள் ராகவியின் சகோதரர் பரத் மற்றும் அவரது குடும்பத்தார் என்பதும் தெரியவந்தது. சுதாசந்தரும், ராகவியும் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே காதலித்த நிலையில், இரண்டு வருடங்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிச் சென்றுள்ளனர். பின்னர், ராகவியை அழைத்து வந்த பெற்றோர் உறவினரான வசந்த்திற்கு திருமணம் செய்துவைத்து, இந்த தம்பதிக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்நிலையில், சுதா சந்தருடன் மீண்டும் நட்பு ஏற்பட்டதால், நகை மற்றும் பணத்தோடு வீட்டை விட்டு வெளியேறி காதலனோடு சென்றுள்ளார். போலீசில் புகார் அளித்து இருவரையும் பிரித்த நிலையிலும் மீண்டும் சுதா சந்தருடன் வசித்து வந்துள்ளார் ராகவி. இதனால் ஆத்திரம் அடைந்த அவரின் சகோதரர் பரத் மற்றும் அவரது உறவினர் உதயா உள்ளிட்டோர் சுதா சந்தரைக் கொலை செய்தது அம்பலமானது. தலைமறைவாக உள்ள சகோதரர் பரத் உள்ளிட்டோரை போலீசார் தேடி வரும் நிலையில், ராகவியின் கணவர் வசந்தின் நண்பர் கார்த்திக் என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Chella

Next Post

சாமானிய மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பு.. வருமான வரி விலக்கு குறித்து மத்திய அரசு முக்கிய முடிவு..

Tue Jan 31 , 2023
நாளை தாக்கல் செய்யப்பட உள்ள மத்திய பட்ஜெட்டில் வருமான வரிவிலக்கு உச்சவரம்பு ரூ.5 லட்சமாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாளை தாக்கல் செய்கிறார்.. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்யும் கடைசி பட்ஜெட் இதுவாகும்.. ஏனெனில் அடுத்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.. இந்நிலையில் […]

You May Like