fbpx

சுட்டெரிக்கும் கோடை வெயில்..!! பலத்த காற்றுடன் கனமழை..!! குளு குளு அறிவிப்பை வெளியிட்ட வானிலை மையம்..!!

சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இதமாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

தோண்ட தோண்ட கிடைத்த சடலம்..!! மொத்தம் 47..!! அதிர்ந்துபோன போலீஸ்..!! வசமாக சிக்கிய மதபோதகர்..!!

Mon Apr 24 , 2023
கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா. இங்கு மாலிண்டி என்ற நகரம் உள்ளது. இது ஒரு கடற்கரையோர பகுதியாகும். இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான பண்ணை ஒன்று இங்கே உள்ளது. இங்கு ஏராளமானோர் தங்கி இருக்கிறார்கள். இந்த பண்ணையில் 15-க்கும் மேற்பட்டவர்கள் உடல் மெலிந்து, எலும்பும் தோலுமாக உள்ளனர். பார்ப்பதற்கே படுமோசமான நிலையில் காணப்படுவதாகவும், இதில் 4 பேர் இறந்து விட்டதாகவும் போலீசுக்கு அதிர்ச்சிகரமான […]

You May Like