சினிமா திரையுலகில் ஆபாச நடிகையாக மக்களால் பார்க்கப்பட்டவர் தான் நடிகை ஷகிலா. ஆனால், தற்போது அவரது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை நினைத்து வருத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இவர் மக்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு ஆபாச படங்களில் நடித்து பெரும் அளவில் பிரபலம் ஆனார்.
அத்துடன். இவர் தனது 15-வது வயதில் ‘ப்ளே கேள்ஸ்’ என்ற படத்தில் துணை நடிகையாக அறிமுகமானார். பின்னர் மலையாளம், தெலுங்கு, தமிழ் என பல்வேறு ஆபாச திரைப்படங்களில் நடித்து மக்களின் வெறுப்பை பெற்றார். எனினும் 90-களில் கவர்ச்சி நடிகையாக கொடிக்கட்டி பறந்த ஷகிலா இளசுகளின் கனவுக்கன்னியாக இருந்தார். ஆனாலும். இவரது அடையாளத்தையே மாற்றியது ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி தான்.
இந்நிகழ்ச்சியினால் புதிய அவதாரம் எடுத்தார் ஷகிலா. இதன் மூலம், தன் உண்மையான நல்ல குணத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த மக்களையும் தன் வசம் கவர்ந்ததோடு, தற்போது பிரபலங்களை வைத்து பேட்டி எடுத்து வருகிறார். இந்நிலையில், சமீபத்திய அவர் வழங்கிய பேட்டி ஒன்று பெரிதும் பேசப்படுகிறது. அவர் கூறுகையில், ”நான் வாழ்நாளில் செய்த மிகப்பெரிய தவறு என்றால் நான் சிறுவயதாக இருக்கும்போதே ஆண் நண்பரின் ஆசை வார்த்தைக்கு மயங்கி அவருடன் பலமுறை உடலுறவில் இருந்தேன்.
பின்னர் எனக்கே தெரியாமல் நான் கர்ப்பமானேன். எனக்கு 5 அல்லது 6 மாத்திற்கு ஒரு முறை தான் மாதவிடாய் வரும். இதனால் நான் சரியாக கவனிக்கவில்லை. பின்னர் என் அம்மா என் வயிற்றை பார்த்து சந்தேகமடைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அப்போது நான் கர்ப்பமாக இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். பின்னர், அங்கேயே கருக்கலைப்பு செய்தனர். நான் செய்த மிகப்பெரிய தவறு அது. என் அம்மாவும் என்னை வாழவேண்டிய நேரத்தில் வாழ விடாமல் பணத்திற்காக ஆசைப்பட்டு தொடர்ந்து மோசமான ஆபாச காட்சிகள் கொண்ட படங்களில் தொடர்ந்து நடிக்க வைத்தார்” என்று ஷகிலா கூறியுள்ளார்.