fbpx

செம குட் நியூஸ்..!! 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களும் ஆல் பாஸ்..!! அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!!

இந்த ஆண்டும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் பாஸ் என்று புதுச்சேரி கல்வித்துறை அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுகின்றனர். ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் 35% மதிப்பெண் பெற்றிருந்தால், அந்த மாணவர்களையும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்புக்கான தேர்ச்சி பட்டியலை கல்வித்துறைக்கு மே 8ஆம் தேதிக்குள் அனைத்து பள்ளி முதல்வர்களும் அனுப்ப வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடு அமலில் இருந்ததால் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டும் புதுச்சேரி கல்வித்துறை அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று அறிவித்துள்ளது.

Chella

Next Post

புலம்பெயர் தொழிலாளர்கள் கவனத்திற்கு..!! இன்னும் 3 மாதங்களுக்குள் கிடைத்துவிடும்..!! உச்சநீதிமன்றம் அதிரடி..!!

Fri Apr 21 , 2023
புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 3 மாதங்களுக்குள் ரேஷன் அட்டை வழங்க வேண்டும் என்று மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் கடந்த 2020ஆம் ஆண்டில் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கோடிக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக சமூக ஆர்வலர்கள் ஹர்ஷ் மந்தர், அஞ்சலி பரத்வாஜ், ஜெகதீப் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த […]

You May Like