fbpx

செம குட் நியூஸ்..!! இனி ரேஷன் கடைகளில் 35 பொருட்கள் கிடைக்கும்..!! மாநில அரசு அதிரடி அறிவிப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு ஆட்சி பொறுப்பில் இருந்து வருகிறது. பொதுமக்களுக்கு பல புதிய அறிவிப்புகளை வழங்கி வரும் சூழலில், இப்போது மற்றொரு முக்கிய முடிவை அம்மாநில அரசு எடுத்துள்ளது. அந்த வகையில் இனிமேல் பால், பிரட், மசாலாப்பொருட்கள், அழகுசாதன பொருட்கள், குடைகள் மற்றும் டார்ச்கள் ஆகிய 35 பொது பயன்பாட்டு பொருட்கள் ரேஷன் கடைகளில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் அரசின் அறிவிப்பின் படி, ரேஷன் கடைகளில் இனி கோதுமை, அரிசி, சர்க்கரையுடன் வெல்லம், நெய், உப்பு, பேக் செய்யப்பட்ட உலர்ந்த பழங்கள், பேக் செய்யப்பட்ட இனிப்புகள், பால் பவுடர், குழந்தைகளுக்கான ஆடை (உள்ளாடை), ராஜ்மா, சோயாபீன், கிரீம், ஊதுபத்தி, சீப்பு, கண்ணாடி, துடைப்பம், பூட்டு, ரெயின்கோட் ஆகியவை விற்கப்படும். அதோடு வால் ஹேங்கர்கள், டிடர்ஜென்ட் பவுடர், பாத்திரம் கழுவும் பார், எலக்ட்ரானிக் பொருட்கள், சுவர் கடிகாரம், தீப்பெட்டி, நைலான், சணல் கயிறு, பிளாஸ்டிக் பைப் (தண்ணீர்), பிளாஸ்டிக் பக்கெட், குவளை மற்றும் வடிகட்டி போன்றவையும் நியாயமான விலையில் விற்கப்படும்.

Chella

Next Post

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை கைவிடும் தமிழ்நாடு அரசு..? அதிர்ச்சியில் மாணவர்களின் பெற்றோர்..!!

Tue May 30 , 2023
தமிழ்நாட்டில் மொத்தம் 2,381 அரசு தொடக்கப் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 4 முதல் 6 வயது வரையிலான குழந்தைகளை பராமரிக்க அங்கன்வாடி மையங்களும் இருக்கிறது. இங்கு குழந்தைகளுக்கு அடிப்படை கல்வி கற்பிக்கப்பட்டு வந்த நிலையில், தனியார் பள்ளிகளில் இருப்பது போல இதற்கான பிரத்யேக வகுப்புகள் இல்லாமல் இருந்தது. இதனால் தனியார் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் படிக்கும் குழந்தைகளை ஒப்பிட்டு பார்க்கும்போது அங்கன்வாடி குழந்தைகளின் கல்வித்திறன் குறைவாக இருந்தது. […]

You May Like