தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 8ஆம் தேதி விடுமுறை என்றும் அன்றைய தினம் நடைபெற உள்ள அரசு தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் எனவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும், அரசு அலுவலகங்களும் குறைந்தபட்ச பணியாளர்களுடன் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.