பென்ச்மார்க் பங்குச் சந்தை குறியீடுகள் முந்தைய அமர்வில் சரிந்த பின்னர் இன்று மீண்டும் உயர்வை கண்டனர். காலை 9:16 மணியளவில் S & PBSE சென்செக்ஸ் 964.86 புள்ளிகள் உயர்ந்து 79,724.26 ஆகவும், NSE நிஃப்டி50ல், 290.60 புள்ளிகள் உயர்ந்து 24,346.20 ஆகவும் வர்த்தகமானது.
ஆசிய சந்தைகள் கடுமையாக மீண்டெழுந்ததால், உள்நாட்டுப் பங்குச் சந்தை ஏற்றம் கண்டது. அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகள் முதலீட்டாளர்களுக்கு உறுதியளித்த பின்னர் இந்த உயர்வு காணப்பட்டது. நிஃப்டி50 இல் டாடா மோட்டார்ஸ், ஓஎன்ஜிசி, எல்&டி, மாருதி மற்றும் அதானி போர்ட்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டியவை. இந்த அமர்வின் போது ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் பங்குகளும் கடுமையாக மீண்டு வந்ததை முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டும்.
Read more ; இங்கிலாந்தில் தஞ்சம் அடையும் ஷேக் ஹசீனா?