fbpx

17 வயது சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது..!! உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

பாலியல் செயலில் ஈடுபடும் இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்சத்தில், சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது என ஒடிசா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாந்தனு கவுரி (45) என்பவர், கடந்த 2013இல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தினமும் வனப்பகுதிக்கு அழைத்து செல்வார். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான அவர், சிறுமியை அழைத்து செல்லும் போதெல்லாம் அவருடன் உடலுறவு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்தார். தான் கர்ப்பமான விஷயம் கூட தெரியாத அந்த சிறுமி, சில மாதங்களுக்கு பின்னரே தனது பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து கூறியிருக்கிறார்.

இதனையடுத்து, பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் சாந்தனு கவுரியை போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கை விசாரித்த கூடுதல் அமர்வு நீதிமன்றம், சாந்தனு கவுரியை குற்றவாளி என தீர்ப்பளித்து சிறை தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, ஒடிசா உயர்நீதிமன்றத்தில் சாந்தனு கவுரி மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.கே.சாஹூ, ”குற்றம் சாட்டப்பட்டவருடன் பாதிக்கப்பட்ட சிறுமி தினமும் காட்டுக்குள் உடலுறவு கொண்டுள்ளார்.

சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட சிறுமியின் வயது 17 ஆக இருந்தது. குற்றம் சாட்டப்பட்டவருக்கு திருமணமாகி 4 குழந்தைகள் இருப்பது என்பது சிறுமிக்கும் தெரியும். இருந்தும் அவருடன் உடலுறவு கொண்டுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் தான் கர்ப்பமாக இருந்தது குறித்து பெற்றோரிடம் தெரிவித்தும், அவரது பாலியல் பலாத்கார செயலை எதிர்க்கவில்லை. மேலும், அதனை யாரிடமும் கூறவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர் பாதிக்கப்பட்ட சிறுமியை திருமணம் செய்து கொள்வதாகவும் உறுதியளிக்கவில்லை.

குற்றம் சாட்டப்பட்ட நபர் திருமணமானவர் மற்றும் 4 குழந்தைகளுக்கு தந்தை என்பதால், தன்னை திருமணம் செய்து கொள்வதற்கான சாத்தியமில்லை என்பதும் சிறுமிக்கும் தெரியும். எனது பார்வையில், அந்த சிறுமியின் சம்மதத்தின் பேரில் தான் எல்லாம் நடந்துள்ளது. எனவே, குற்றம் சாட்டப்பட்டவரை தண்டிப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை. சிறுமியின் வாக்குமூலமானது, பதிவு செய்யப்பட்ட ஆதாரங்களுடன் ஒத்துப்போகவில்லை. இருவருக்கும் இடையிலான பாலியல் செயலை கற்பழிப்பு என்று கூற முடியாது.

பாதிக்கப்பட்ட சிறுமிக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை திரும்பப் பெற வேண்டிய அவசியமும் இல்லை. எனவே, பாலியல் பலாத்காரம் மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் 10 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் சாந்தனு கவுரி விடுதலை செய்யப்படுகிறார்” தீர்ப்பு வழங்கினார்.

Chella

Next Post

திடீரென்று பயிற்சியை தொடங்கினார் ஷ்ரேயஸ்.. என்ன காரணம்??

Wed Jul 12 , 2023
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. ஆனால், டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படாமல் இருந்தது. ஹார்திக் பாண்டியா டி20 அணிக்கு கேப்டனாக இருந்து வருவதால், ரோஹித் ஷர்மாவுக்கு பிறகு அவர்தான் இந்திய அணியை வழிநடத்துவார் எனக் கருதப்பட்டது. ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஹார்திக் பாண்டியா விளையாட முடியாத நிலை இருப்பதால், ஹார்திக் பாண்டியாவை டெஸ்ட் கேப்டனாக நியமிப்பது ஆபத்தாகும். ஏனென்றால், டெஸ்ட் […]
ஒருநாள் கிரிக்கெட் தொடர்..!! ஷ்ரேயாஸ் அய்யர் திடீர் விலகல்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

You May Like