fbpx

சகோதரிகளின் கர்ப்பை காப்பாற்றிய பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி..!! வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பார்த்திபன். 42 வயதான இவர், கட்டிட மேஸ்திரி ஆக இருந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆன நிலையில், மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் 9ஆம் வகுப்பும், இளைய மகள் 8ஆம் வகுப்பும் படித்து வருகின்றனர். இருவரும் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகின்றனர். பார்த்திபன் தனது 2 மகள்களிடமும் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். தந்தை தங்களிடம் தவறாக நடக்கிறார் என்பதை அவர்கள் உணராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் தான் அரசுப் பள்ளியில் மாவட்ட சமூக பாதுகாப்பு நலத்துறையின் சார்பில் பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போதுதான் தங்கள் தந்தை தங்களிடம் தவறாக நடக்கிறார் என்பதை உணர்ந்திருக்கிறார்கள்.

இதையடுத்து, சகோதரிகள் இருவரும் ஆசிரியர்களிடம் சென்று தங்கள் தந்தை தங்களிடம் தவறாக நடப்பதை சொல்லியிருக்கின்றனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள், மாவட்ட ஆட்சியர் வளர்மதியிடம் புகார் அளித்துள்ளனர். ஆட்சியரின் மூலமாக மாவட்ட சமூக பாதுகாப்புத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். மாணவிகள் சொன்னது உண்மை என்பது தெரியவந்திருக்கிறது. அதன் பின்னர் அரக்கோணம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். மாணவிகளின் தாய் தனக்கு இதுகுறித்து எதுவும் தெரியாது என்று முதலில் தெரிவித்துள்ளார். பின்னர் போலீசார் விசாரணை நடத்திய போது தான், குடிபோதையில் தன்னை அடிக்கடி கணவர் கொடுமைப்படுத்தி வருகிறார். நடப்பதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று மிரட்டினர். இதற்கு பயந்து தான் நீங்கள் கேட்ட போது வாய் திறக்க முடியவில்லை என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து, பார்த்திபனை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Chella

Next Post

காத்திருந்து காதலியின் கதையை முடித்த காதலன்..!! துடிதுடித்து பலியான சோகம்..!!

Fri Mar 17 , 2023
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியை அடுத்த ராதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தரணி (19). இந்த இளம்பெண் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்றபோது, வாலிபர் ஒருவர் தரணியை சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடி உள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து தரணி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக […]
காத்திருந்து காதலியின் கதையை முடித்த காதலன்..!! துடிதுடித்து பலியான சோகம்..!!

You May Like