fbpx

ஷவர்மா மரணம் எதிரொலி..!! கெட்டுப்போன உணவுகளை நீங்களே குப்பையில கொட்டிருங்க..!! ஓட்டல்களுக்கு எச்சரிக்கை

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14 வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல்லில் கெட்டுப்போன ஷவர்மாவை விற்பனை செய்த உணவகத்தின் உரிமையாளர் உள்ளிட்ட 3 கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நாமக்கல் நகரில் ஷவர்மா விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, பல இடங்களில் ஷவர்மா விற்பனை செய்யும் கடைகளில் ஆய்வு நடத்தி கெட்டுப்போன தரமில்லாத உணவுப்பொருட்களை அதிகாரிகள் குப்பையில் கொட்டினர். அப்படியிருந்தும் தஞ்சாவூரில் ஷவர்மா சாப்பிட்ட 3 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டனர். உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சோதனை நடத்தி கெட்டுப்போன உணவுப்பொருட்களை விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு சீல் வைத்தாலும் அதையும் மீறி உயிருக்கு ஆபத்தான வகையில் உணவுகளை விற்பனை செய்து வருகின்றனர்.

இதேபோல் ஷவர்மா கடைகளுக்கும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். சாலையோரம் வைத்து ஷவர்மா விற்பனை செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளனர். மேலும், உணவு கெட்டுப்போயிருந்தால் நீங்களே குப்பையில் கொட்டி விடுங்கள் என அனைத்து உணவகங்களுக்கும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர். அதையும் மீறி வைத்திருந்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

சர்க்கரையை பதுக்கி வைக்கும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்...! மத்திய அரசு உத்தரவு...!

Fri Sep 22 , 2023
நாட்டில் சர்க்கரையின் சில்லறை விற்பனை விலையை மத்திய அரசு வெற்றிகரமாக பராமரித்து வருகிறது. சர்க்கரைச் சந்தையில் பதுக்கலைத் தடுப்பதற்கும், நேர்மையற்ற ஊகங்களைத் தடுப்பதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் இணையதளத்தில் (https://esugar.nic.in) வணிகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லறை விற்பனையாளர்கள், பெரிய விநியோக சில்லறை விற்பனையாளர்கள், சர்க்கரை பதப்படுத்துபவர்கள் ஆகியோருக்கு சர்க்கரையின் இருப்பு நிலையை கட்டாயமாக வெளியிடுமாறு அரசு ஆணையிட்டுள்ளது. பதுக்கல் […]

You May Like