fbpx

ஷாக்!… சிக்கன் ‘ஷவர்மா’ சாப்பிட்ட 19 வயது இளைஞர் மரணம்!… 2 பேர் கைது!

உணவு பிரியர்களே உஷார்..!! நாய் தின்ற சவர்மாவை விற்பனை செய்த ஓட்டல்..!! வீடியோ வைரலானதால் சீல்..!!

‘Shawarma’: மும்பையில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்ட 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மீண்டும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையில் கடந்த 4ம் தேதி பிரதமேஷ் போக்சே 19 வயது இளைஞர், அருகில் உள்ள ஸ்டால் ஒன்றில் சிக்கன் ஷவர்மா சாப்பிட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு கடும் வயிற்று வலி மற்றும் வாந்தி ஏற்பட்டதையடுத்து, அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பின்னர், மேல் சிகிச்சைக்காக KEM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், தொடர்ந்து உடல்நிலையில் சரியில்லாமல் இருந்ததையடுத்து, கடந்த திங்கள்கிழமை உயிரிழந்தார்.

இதையடுத்து, ஷவர்மா மாதிரியை விசாரணைக்கு அனுப்பி, கடைக்காரர்கள் ஆனந்த் காம்ப்ளே மற்றும் முகமது அகமது ரைசா ஷேக் ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் மீது ஐபிசி 304 மற்றும் 34 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது. தொடரும் மரணங்கள் ஷவர்மா பிரியர்களிடம் மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: சர்ச்சை கருத்து!… முதல்வர் ஸ்டாலினுக்கு துணிச்சல் உள்ளதா?… பிரதமர் மோடி சவால்!

Kokila

Next Post

பணத்தை எந்த திசையில் வைத்தால் மேலும் செல்வம் பெருகும்..? இந்த இடத்தில் மட்டும் வைக்கவே கூடாது..!!

Thu May 9 , 2024
பணத்தை வடக்கு திசையில் வைக்க முடியாதவர்கள் மாற்றாக கிழக்கு திசையில் வைக்கலாம். கிழக்கிலும் செல்வம் பெருகுவதற்கான வாஸ்து சாஸ்திரம் இடம்பெற்றுள்ளன. பணத்தை வைக்கும் இடத்தில் லக்ஷ்மி குபேர படத்தை, அல்லது எந்திரத்தை வைத்துக்கொண்டால் செல்வம் மேலும் பெருகும் என்று சொல்லப்படுகிறது. தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் தங்களது இருக்கையானது, வட மேற்கு திசையை நோக்கியவாறு இருந்தால், பணம் வைக்கும் பெட்டி உங்களுக்கு இடது புறத்தில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதேபோல் […]

You May Like