சென்னையை அடுத்த ஆவடி ரயில் நிலையம் அருகே மின்சார ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதால், இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதன் காரணமாக சிக்னல் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் வரை தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்றைய தினம் (அக்டோபர் 24) காலை திருவள்ளூரில் இருந்து திருத்தணிக்கு இயக்கப்பட்ட மின்சார ரயில் அண்ணனூரில் இருந்து ஆவடிக்கு மின்சார ரயில் வந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த ரயிலில் 4 பெட்டிகள் தடம் புரண்டது.
அதிர்ஷ்டவசமாக பயணிகள் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏதும் நிகழவில்லை. இது குறித்து ரயில்வே போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தின் காரணமாக, மற்ற மின்சார ரயில்களின் பயணம், வந்தே பாரத் உள்ளிட்ட ரயில் சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.