fbpx

திருவாரூரில் அதிர்ச்சி..!! 4 பேருக்கு பன்றிக் காய்ச்சல்..!! ஒருவருக்கு கொரோனா பாதிப்பு..!!

திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 65 வயது மூதாட்டி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து திருவாரூர் மருத்துவக் கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் கூறுகையில், ‘குளிர்காலங்களில் பரவுகின்ற எச்1என்1 வைரஸ் தொற்று பாதித்து 3 பெண்கள் மற்றும் ஒரு நபர் உட்பட 4 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதனை பன்றிக்காய்ச்சல் எனவும் சொல்லலாம். இது குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை. இதற்கு உரிய மருத்துவ வசதி உள்ளது. மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கை, கால்களை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும்’ என்றார்.

Chella

Next Post

’இனி அவர்கள் அனுமதி கொடுத்தால் மட்டுமே பணம் அனுப்ப முடியும்..!! டிசம்பர் 31 முதல் அமல்’..!!

Sat Dec 16 , 2023
இந்திய அரசும் UPI பேமெண்ட்டுகளை பயன்படுத்த மக்களை ஊக்குவித்து வரும் இந்த சூழ்நிலையில், அண்மையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் இந்த UPI-க்களை 5 லட்சம் ரூபாய் வரை பயன்படுத்திக் கொள்ளலாம் என்கின்ற வரம்பை அதிகரித்து உத்தரவிட்டிருந்தது ரிசர்வ் வங்கி. இந்த மாற்றத்தினால் பல்வேறு நன்மைகளை பெற்றுள்ளதாக பல கல்வி நிறுவனங்களும், மருத்துவமனைகளும் தெரிவித்துள்ளன. முன்னதாக ஒரு யுபிஐ பேமென்ட்டின் வரம்பு என்பது ஒரு லட்சம் ரூபாயாக இருந்தது. இந்த […]

You May Like