ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தி ஆவின் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது..
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அதன்படி இந்த உணவுப் பொருட்களுக்கு 5% ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டது.. இதன் காரணமாக கடந்த ஜூலை மாதம் ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டது.. அதன்படி, 100 கிராம் தயிர் விலை 10 ரூபாயில் இருந்து 12 ரூபாயாக உயர்த்தப்பட்டது.. இதே போல் 200 கிராம் தயிர் விலை 25 ரூபாயில் இருந்து 28 ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.. பாக்கெட்டில் அடைக்கப்பட்ட அரை லிட்டர் தயிர் 30 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்த்தப்பட்டது..
இந்நிலையில் மேலும் சில ஆவின் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.. 8 இனிப்பு வகைகளின் விலை உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.. அதன்படி குலாப் ஜாமூன் 125 கிராம் 5 ரூபாய் உயர்ந்து ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது..
மைசூர்பா அரை கிலோ 230 ரூபாயில் இருந்து 270 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 100 கிராம் ரசகுல்லா விலை ரூ.80லிருந்து ரூ.100ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.. பால்கோவா 100 கிராம் 47 என்று விற்கப்பட்ட நிலையில் அது 55 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.. 100 கிராம் டேட்ஸ் கோவாவின் விலை ரூ.50-ல் இருந்து ரூ.60-ஆக உயர்ந்துள்ளது.. 500 கிராம் ஸ்வீட்லெஸ் கோவாவின் விலை ரூ.260-ல் இருந்து ரூ.300ஆக உயர்ந்துள்ளது..