திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி புத்துச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வகை மதுக்கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்கள் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை கலால்துறை துணை ஆணையர் சுதாகர் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் வாங்கி, பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.