fbpx

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!! இனி இதற்கும் கட்டணம்..!! இன்று முதல் அமல்..!!

ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்துவோருக்கு புதிய அறிவிப்பு ஒன்றை அந்த வங்கி வெளியிட்டுள்ளது.

இன்றைய நவீன காலத்தில் பலரும் அவசரக்கால கடனை பெறுவதற்கு மட்டுமல்லாமல், பல முக்கிய நோக்கங்களுக்காகவும் கிரெடிட் கார்டு சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, ஆன்லைன் ஷாப்பிங் முதல் டிக்கெட் முன்பதிவு செய்வது வரை அனைத்திற்கும் கிரெடிட் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல், கிரெடிட் கார்டு பயன்படுத்தி வாடகையும் செலுத்த தொடங்கிவிட்டனர். இதற்டையே, ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி வாடகை செலுத்துபவர்களில் ஒருவராக இருந்தால் கிரெடிட் கார்டு மூலமாக வாடகை செலுத்துவதற்கு வங்கி தற்போது ஒரு சதவீதத்தை கட்டணமாக வசூலிக்கும் என்பதை கட்டாயம் வாடிக்கையாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.

ICICI வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஷாக் நியூஸ்..!! இனி இதற்கும் கட்டணம்..!! இன்று முதல் அமல்..!!

இந்த புதிய விதி இன்று அக்டோபர் 20ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக ஐசிஐசிஐ வங்கி அதன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிவித்துள்ளது. எனவே, ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி cred, redgiraffe, mygate, Paytm , magicbricks போன்ற தளங்களில் வாடகை செலுத்தும் வாடிக்கையாளர்கள் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 லட்சம்..!! 2 மணிக்கு மாயமான ரூ.5 லட்சம்..!! பரபரப்பு சம்பவம்

Thu Oct 20 , 2022
மதியம் 12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு லோன் பணம் ரூ.10 லட்சம் கிரெடிட் ஆன நிலையில், மதியம் 2 மணிக்கு ரூ.5 லட்சம் மாயமான சம்பவம் தூத்துக்குடியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் மதுரா கோட்ஸ் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரது மகன் சரவணமுருகன். இவர் ஸ்ரீ வாரி டெக்னிக்ஸ் என்ற பெயரில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்கு பொருள் விநியோகம் செய்து வருகிறார். அதற்காக அனல்மின் நிலைய கனரா வங்கிக் கிளையில் […]
12 மணிக்கு வங்கிக் கணக்கிற்கு வந்த ரூ.10 லட்சம்..!! 2 மணிக்கு மாயமான ரூ.5 லட்சம்..!! பரபரப்பு சம்பவம்

You May Like