fbpx

பெண்களுக்கு ஷாக் நியூஸ்.. ஒரே நாளில் ரூ.256 உயர்ந்த தங்கம் விலை..

சென்னையில் தங்கம் விலை சவரனுக்குரூ.256 அதிகரித்து, ரூ.38,136-க்கு விற்பனையாகிறது….

உக்ரைன் – ரஷ்யா போர் உள்ளிட்ட பல காரணங்களால் சர்வதேச அளவில் பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.. கச்சா எண்ணெய், தங்கம் ஆகியவற்றின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.. பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்றன.. பாதுகாப்பு கருதி பல முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் இருந்து பணத்தை எடுத்து தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர்.. இதனால் தங்கத்தின் தேவை அதிகரித்து, விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிறது..

இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,435க்கு விற்பனையாகிறது… இதனால் சவரனுக்கு ரூ.256 அதிகரித்து, ரூ.38,136-க்கு விற்பனையாகிறது.. இதே போல் இன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது.. ஒரு கிராம் வெள்ளி ரூ.1.20 உயர்ந்து ரூ.61.20-க்கு விற்பனையாகிறது.. இதனால் ஒரு கிலோ வெள்ளி ரூ.61,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Maha

Next Post

தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி..! வெளியான முக்கிய அறிக்கை..!

Thu Jul 28 , 2022
தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களில் மருத்துவக்கல்லூரி அமைப்பதற்கு மத்திய அரசு கைவிரித்த நிலையில், தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மத்திய அரசின் நிதியுதவியுடன் அமைக்கப்படும் 75 மருத்துவக் கல்லூரிகளும் பல்வேறு மாநிலங்களுக்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு மத்திய அரசின் நிதியுதவிக்கு வாய்ப்பில்லை […]
தமிழகத்தில் மீதமுள்ள 6 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி..! வெளியான முக்கிய அறிக்கை..!

You May Like