fbpx

அதிர்ச்சி..!! தவளை விழுந்த ஐஸ்கிரீம்..!! 3 குழந்தைகளுக்கு மருத்துவமனையில் சிகிச்சை..!! பரபரப்பு..!!

தவளை விழுந்த ஐஸ்கிரீமை சாப்பிட்ட 3 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருக பெருமானின் அறுபடை கோயில்களிலும் தைப்பூச திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்திற்கு முருக பெருமானை தரிசிப்பதற்காக அன்புச்செல்வம் – ஜானகிஸ்ரீ தம்பதி தங்களது 3 பெண் குழந்தைகளுடன் வந்திருந்தனர். அப்போது அவர்களது குழந்தைகள் ஐஸ்கிரீம் வாங்கி தரச்சொல்லி கேட்டதால், தனியார் ஐஸ்கிரீம் கடையில், நித்ரா ஸ்ரீ, ரக்ஷனா ஸ்ரீ, தாரணி ஸ்ரீ ஆகிய 3 குழந்தைகளுக்கு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்துள்ளனர்.

அந்த ஐஸ்கிரீமை சாப்பிட்டபோது, அதில் தவளை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து 3 குழந்தைகளையும் சிகிச்சைக்காக திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அனுமதித்தனர். அதன்பிறகு, குழந்தைகளின் பெற்றோர் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் ஐஸ்கிரீம் கடை மீது புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் உடனடியாக சுகாதாரமற்ற முறையில் குளிர்சாதன பொருட்களை விற்பனை செய்து வந்த ஐஸ்கிரீம் கடை உரிமையாளர் துரைராஜ் மீது 273 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

தனியாக வந்த ரவுடி..!! சுத்து போட்ட கும்பல்..!! பயங்கர ஆயுதங்களால் தலையை துண்டித்த கொடூரம்..!!

Mon Feb 6 , 2023
சேலத்தில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்த் (44). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரு குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே, ரவுடி ஆனந்த் மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் காவல்நிலையத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு உறவினர் வீட்டுக்கு ஆனந்த் தனது இருசக்கர வாகனத்தில் […]

You May Like