பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஹமாஸ் படையினர், இஸ்ரேலின் டெல் அவி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 5,000-க்கும் மேற்பட்ட ஏவுகணை வீசித் தாக்குதல் நடத்தினர். இதனையடுத்து, போர் பிரகடனத்தை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்தார். தொடர்ந்து, காசா நகரில் ஏவுகணை மற்றும் டிரோன் குண்டுகளை வீசி இஸ்ரேலும் பதிலடி தாக்குதலை தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், பாலஸ்தீன பகுதியின் காசா முனை எல்லையில் இஸ்ரேல் தனது ஒரு லட்சம் வீரர்களை குவித்துள்ளது. இதன் மூலம் காசா மீது மேலும் ஒரு தாக்குதலினை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் இருப்பிடங்கள், கட்டிடங்கள் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
இந்நிலையில் தான், காசா எல்லையில் இராணுவ தாங்கிகள், ஆயுதங்களுடன் ஒரு லட்சம் இஸ்ரேலிய வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்ரேல் விரைவில் காசா மீது தரைவழி தாக்குதல்களை நடத்தலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிறிது நேரத்துக்கு முன்னதாக காசாவுக்குள் நுழைந்து தரைவழி தாக்குதல்களை இஸ்ரேல் நடத்த தயாராகி வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.