fbpx

அதிர்ச்சி..!! திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி..!! மருத்துவர்கள் தீவிர கண்காணிப்பு..!!

அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடமும் பணம் பெற்று மோசடி செய்ததாகப் புகார் கிளம்பியது. அதன் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த வழக்கைக் கையில் எடுத்தது. இதுதொடர்பாக கடந்த மே மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜிக்குத் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அதில் பல களேபரங்கள் அரங்கேறின. அதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறை சோதனை நடத்திய நிலையில், அன்று இரவு அவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து செந்தில் பாலாஜி புழல் சிறையிலேயே இருந்து வந்தார். இதற்கிடையே, திடீரென இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜி உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ரத்த கொதிப்பு மற்றும் நீரிழிவு நோய்களுக்காக அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள சிறைத்துறை பிரிவு வார்டில் அவருக்கு மருத்துவர்கள் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Chella

Next Post

ப்ரோ கபடி லீக் ஏலம் 2023 இன்று தொடக்கம்!... அதிக விலைக்கு எடுக்கப்பட்ட வீரர் யார்?... எத்தனை கோடி தெரியுமா?

Mon Oct 9 , 2023
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று இந்தியாவின் ஆடவர் கபடி நட்சத்திரங்கள் தங்கப் பதக்கம் வென்றனர். இந்தநிலையில் ப்ரோ கபடி லீக் டிசம்பர் 2 ஆம் தேதி தொடங்குகிறது. இதனையொட்டி ,ப்ரோ கபடி லீக் ஏலம்: பிகேஎல் சீசன் 10க்கான வீரர்கள் ஏலம் மும்பையில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், புனேரி பால்டன், பெங்களூரு புல்ஸ், உ.பி.யோத்தா, தமிழ் தலைவாஸ், தபாங் டெல்லி […]

You May Like