fbpx

அதிர்ச்சி..!! திடீர் மூச்சுத்திணறல்..!! மருத்துவமனையில் அட்மிட் ஆன நாகை எம்பி..!! மருத்துவர்கள் தீவிர சிகிச்சை..!!

நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த செல்வராஜ் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், செல்வராஜுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அவருக்கு அங்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நுரையீரல் தொற்று காரணமாக மூச்சுத் திண்றல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், மருத்துவர்கள் கண்காணிப்பில் அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Chella

Next Post

வந்தாச்சு உரிமைத்தொகை ரூ.1,000..!! உங்களுக்கு மெசேஜ் வந்துருச்சா..? உடனே செக் பண்ணுங்க..!!

Wed Jan 10 , 2024
தமிழ்நாடு அரசின் 2023-24ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், “மகளிருக்கு சொத்துரிமையும், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு அளித்தது முதல், தற்போது கட்டணமில்லாப் பேருந்து பயணம் வழங்கியது வரை எப்போதும் அரசு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியில் திமுக அறிவித்திருந்தது. அதன்படி, தகுதிவாய்ந்த குடும்பங்களின் குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில் மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. […]

You May Like