fbpx

அதிர்ச்சி..!! விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீச்சு..!! தீவிரமடைந்த போராட்டம்..!!

குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை முதல் டெல்லியை நோக்கி டிராக்டரில் பேரணி சென்று கொண்டிருக்கின்றனர். இன்று காலை 10 மணியளவில் ஃபதேகர் சாஹிபில் இருந்து அணிவகுப்பைத் தொடங்கி, ஷம்பு எல்லை வழியாக டெல்லியை நோக்கி விவசாயிகள் செல்கின்றனர்.

ஃபதேகர் சாஹிப் மற்றும் ஷம்பு எல்லைக்கு இடையிலான தூரம் 35-40 கி.மீ. ஆகும். இப்போராட்டத்தில் விவசாயிகளுடன் முதியவர்கள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் என குடும்பத்தினரும் டிராக்டரில் அமர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். ஹரியானாவில் உள்ள அதிகாரிகள் அம்பாலா, ஜிந்த், ஃபதேஹாபாத், குருஷேத்ரா, சிர்சாவில் பல இடங்களில் கான்கிரீட் தடுப்புகள், ஆணிகள், முள்கம்பிகளைப் பயன்படுத்தி பஞ்சாப், ஹரியானாவில் இருந்து டெல்லி செல்லும் எல்லைகளை அடைத்துள்ளனர்.

பஞ்சாப் – ஹரியானா எல்லைகளில் பல இடங்களில் தண்ணீர் பீய்ச்சியடிக்கும் வாகனங்கள் உள்ளிட்ட கலவரக் கட்டுப்பாட்டு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. ஏராளமான காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா அரசு 15 மாவட்டங்களில் 144 தடை உத்தரவை பிறப்பித்திருந்தது. இந்நிலையில், அம்பாலாவில் உள்ள ஷம்பு எல்லையை அடைந்த விவசாயிகள் தடுப்புகளை உடைக்க முற்பட்டனர். அப்போது பேரணி குழுவினர் மீது போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர். இதனால் அந்த இடத்தில் இருந்து அனைவரும் சிதறி ஓடினர். அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக மாறியது. கண்ணீர் புகைக் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

Chella

Next Post

இந்தியாவிலிருந்து கொண்டு செல்லப்பட்ட சிவன் சிலை..! மர்ம பெட்டகத்தில் என்ன உள்ளது.?

Tue Feb 13 , 2024
ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள சிட்னி நகரில் தென்மேற்கு பகுதியில் மிண்டோ என்ற இடத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ முக்தி குப்தேஸ்வரர் திருக்கோயில். 1997ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த கோயில் பூமிக்கு அடியில் 1450சதுர அடி பரப்பில் குகையினுள் அமைக்கப்ட்ட அதிசய திருகோயிலாக இருந்து வருகிறது. இக்கோயிலின் கருவறைக்குள் இருபக்கமும் பளிங்கு கல்லினாலான மாதா மற்றும் ராம் பரிவார் மந்திர் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுப்புற சுவர்களில் விநாயக மந்திரும், ஆஞ்சநேய மந்திரும் அமைத்துள்ளனர். உலகிலேயே […]

You May Like