fbpx

அதிர்ச்சி..!! லாரி மீது மோதிய பேருந்து..!! 6 பேர் பரிதாப பலி..!! 18 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..!!

மகாராஷ்டிரா மாநிலம் ஷஹாபூர் கிராமத்திற்கு அருகே ஜல்னா-வாடிகோத்ரி MH20BL 3573 என்ற எண் கொண்ட பேருந்தும், டிரக்கும் மோதி விபத்துக்குள்ளானது. ஒரு குழந்தை உட்பட 25 பயணிகளுடன் ஜியோராயில் இருந்து ஜல்னா நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, ஆரஞ்சு பழங்களை ஏற்றிச் சென்றுக் கொண்டிருந்த டிரக்கின் மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் மற்றொருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் 18 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்களில் 6 பேர் ஆபத்தான நிலையில், அம்பத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

விபத்து நடந்த உடனேயே சம்பவ இடத்தில் கூடிய அப்பகுதி மக்கள், உடனே ஆம்புலன்ஸ், காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களை பத்திரமாக மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Read More : ’மார்பகங்களை துணிச்சலாக காட்டிய நடிகை’..!! ’மத்திய அமைச்சரின் வீட்டிற்கு போனதே அதுக்காகத்தான்’..!! மீனா குறித்து வெளியான பகீர் தகவல்..!!

English Summary

In this accident, 5 people died on the spot. Another person is said to have died after being taken to hospital with serious injuries.

Chella

Next Post

சென்னையில் ரயிலை கவிழ்க்க சதி..? பீதியில் மக்கள்..!! நடந்தது என்ன..?

Sat Sep 21 , 2024
Was there a conspiracy to derail the train? The railway police have set up two separate teams and are investigating.

You May Like