fbpx

அதிர்ச்சி..!! பொங்கலுக்கு வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசம்..!! பெரும் பரபரப்பு..!!

பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு வழங்க வைத்திருந்த பல லட்சம் ரூபாய் மதிப்பிலான வேட்டி சேலைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு நள்ளிரவில் திடீரென தீப்பற்றி எரிவதாக அலுவலக வளாகத்தில் பணியில் இரவு நேரக் காவலர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த 30-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 4 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். முதல்கட்ட விசாரணையில், மதுரை மாவட்டத்தில் நியாய விலைக் கடைகளில் பொதுமக்களுக்கு விநியோகம் செய்வதற்காக மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட சுமார் 50,000 வேட்டி, சேலைகள் இந்த அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிர்ச்சி..!! பொங்கலுக்கு வழங்கவிருந்த இலவச வேட்டி, சேலைகள் தீயில் எரிந்து நாசம்..!! பெரும் பரபரப்பு..!!

மேலும், இந்த சம்பவம் குறித்து தடய அறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, பொங்கல் பண்டிகைக்கு பரிசு பெட்டகம் வழங்க இன்று காலை டோக்கன் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், மதுரையில் பொதுமக்களுக்கு வழங்க வைக்கப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொங்கல் வேட்டி, சேலை எரிந்து நாசமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தல்லாகுளம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Chella

Next Post

அனல் பறக்கும் தமிழ்நாடு சட்டசபை..!! ஆளுநரை பேசவிடாமல் உறுப்பினர்கள் முழக்கம்..!!

Mon Jan 9 , 2023
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவை இன்று கூடியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் கூட்டத்தொடர் தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க, அலுவல் ஆய்வு கூட்டம் இன்று நண்பகலில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் பேரவை கூட்டத்தொடரின் நாள்கள் இறுதி செய்யப்படும். இந்தக் கூட்டத்தில் […]
’நீங்க (ளா) படிச்சது எதுமே செல்லாது’..!! முதல்வரின் செயலால் கோபத்துடன் வெளியேறிய ஆளுநர்..!!

You May Like