fbpx

அதிர்ச்சி..!! சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை மீண்டும் வெளுத்து வாங்கப்போகிறது..!!

சென்னை உள்பட 4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், நாகை, ராமநாதபுரம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மக்கள் மிகவும் மோசமான சூழ்நிலையை சந்தித்து வருகின்றனர்.

வீடுகளில் மழைநீர் புகுந்து இருப்பதால் அன்றாட உணவுக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு அதிகாரிகள் மின்னல் வேகத்தில் பணியாற்றி வந்தாலும் மக்கள் உணவின்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. வீடுகளில் தேங்கி இருக்கும் மழை நீரால் மின்சாரம் தடைப்பட்டுள்ளது. படிப்படியாக மழை நீரை அகற்றும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்திள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, வெள்ளத்தில் மிதந்து கொண்டிருக்கும் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட மக்கள், மீண்டும் மழை பெய்யும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Chella

Next Post

படிக்க சொன்னது ஒரு குத்தமா?… வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய மாணவர்கள்!

Wed Dec 6 , 2023
விருதுநகரில் 2 மாணவர்கள் வகுப்பறையில் புகுந்து ஆசிரியரை வெட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள திருத்தங்கலில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பொருளாதார ஆசிரியராக கடற்கரை ராஜ் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இதனிடையே, இவரது வகுப்பில் பயிலும் சில மாணவர்கள் சரியாக படிக்காமலும், வகுப்பறையில் சக மாணவர்களுடன் சேர்ந்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டும் வந்துள்ளனர். இந்நிலையில், அப்படி அராஜகம் செய்த இரண்டு மாணவர்களை […]

You May Like