fbpx

ஷாக்கிங்..!! சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு..!! தனிமை, வீட்டிற்கு சீல்வைப்பு..!!

சீனாவில் இருந்து இந்தியா திரும்பிய நபருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பி.எஃப்-7 வகை கொரோனா சீனாவில் வேகமாக பரவி வருகிறது. இதனால், அந்நாட்டில் தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவமனை படுக்கைகளும் வேகமாக நிரம்பி வருவதால், கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் சீன அரசு திணறில் வருகிறது. இந்நிலையில், சீனாவில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவிற்கு வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். அவரது வீட்டிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மரபணு சோதனை ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்விற்கு பிறகே அந்த நபருக்கு பி.எஃப்-7 வகை கொரோனா தொற்று உள்ளதா என்பது தெரியவரும்.

ஷாக்கிங்..!! சீனாவில் இருந்து இந்தியா திரும்பியவருக்கு உருமாறிய கொரோனா பாதிப்பு..!! தனிமை, வீட்டிற்கு சீல்வைப்பு..!!

இதற்கிடையே, நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் கொரோனா சிகிச்சை ஒத்திகை மேற்கொள்ளப்பட உள்ளது. ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஐ.சி.யூ. படுக்கைகள் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டு, இந்த ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. மருத்துவ துறை சார்ந்த அனைத்து பணியாளர்களும் இதில் பங்கேற்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Chella

Next Post

தமிழக அரசின் பொங்கல் பரிசு ரூ.1,000..!! டோக்கன்கள் விநியோகம்..!! வெளியான முக்கிய அறிவிப்பு..!!

Mon Dec 26 , 2022
பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வரும் 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் […]

You May Like