fbpx

அதிர்ச்சி மரணம்..!! ‘பத்து தல’ திரைப்படத்தின் உதவி இயக்குனர் உடல்நலக்குறைவால் காலமானார்..!!

கடந்தாண்டு சிம்பு நடிப்பில் வெளியான ’பத்து தல’ திரைப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மரணம் குறித்து இயக்குனர் ஓபேலி. என்.கிருஷ்ணா ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். ஓபேலி. என்.கிருஷ்ணா சிவராஜ்குமாரின் கன்னடப் படமான மஃப்தியை தமிழில் சிம்புவை வைத்து பத்து தல என ரீமேக் செய்திருந்தார்.

ஆனால், அந்த படம் பெரிய வெற்றி பெறவில்லை. இப்படத்தின் உதவி இயக்குனராக சரவணன் பணியாற்றி வந்தார். கடந்தாண்டு இறுதியில் உதவி இயக்குனர் சரவணன் திடீர் உடல் நலக்குறைவால் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தாலும், சிகிச்சைக்கு ஒத்துழைக்க முடியாமல் உடல் நலிவுற்றதால் இளம் வயதிலேயே சரவணன் பரிதாபமாக இன்று உயிரிழந்தார்.

பத்து தல உதவி இயக்குனர் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக தகவல் கிடைத்ததும், கடந்த டிசம்பரில் அவரது மருத்துவ செலவுக்காக ஒரு லட்சம் ரூபாய் கொடுத்து உதவினார் சிம்பு. ஆனால், சிகிச்சை பலனின்றி சரவணன் உயிரிழந்தது திரையுலக பிரபலங்கள் மற்றும் நடிகர்கள் பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Chella

Next Post

தமிழ்நாட்டில் அரிசிக்கு தட்டுப்பாடு..? மேலும் விலை உயரும் அபாயம்..? அதிகாரிகள் அதிர்ச்சி தகவல்..!!

Sat Feb 17 , 2024
தமிழ்நாட்டில் சுமார் 2 கோடிக்கும் அதிகமான குடும்ப அட்டைகள் உள்ளன. இதில், 90 சதவீதத்திற்கு மேல் உள் குடும்ப அட்டைகள் அரிசி அட்டைகளாகவே உள்ளன. இவற்றிற்கு மத்திய அரசின் சார்பிலும் மாநில அரசின் சார்பிலும் அரிசி வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுவிநியோக திட்டம் மிகச்சிறப்பாக செயல்படுத்தப்படுகிறது. தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்கிறது. இந்த நெல், அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு […]

You May Like