fbpx

#Shocking..!! பிணவறைக்கு வரும் பெண் உடல்களுடனும், பிணவறைக்குள் நர்சுகளுடன் உல்லாசம்..!! அதிரவைக்கும் வீடியோ

கர்நாடக அருகே நர்சுகளுடன் உல்லாசமாக இருந்ததுடன் பிணவறையில் பெண் உடல்களை நிர்வாணமாக படமெடுத்த ஊழியரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மடிகேரி அருகே கடகதாலு கிராமத்தை சேர்ந்தவர் 30 வயதான சையத். இவர் கடந்த 2021ஆம் ஆண்டு கொரோனா காலக்கட்டத்தில் மடிகேரி அரசு மருத்துவமனையில் பிணவறையில் ஒப்பந்த பிணவறை ஊழியராக பணி அமர்த்தப்பட்டார். கடந்த சில மாதங்களுக்கு முன்பால கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதாக சையதுக்கு விருது வழங்கப்பட்டது. இந்த சூழலில், கடந்த மாதம் சையத் மடிகேரியில் உள்ள ஒரு பெண்ணின் வீட்டுக்குள் நுழைய முயன்றபோது, அப்பகுதி மக்கள் அவரை பிடித்து தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். சிறிது காலம் சிறையில் இருந்த அவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளிவந்துள்ளார். சையத் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்த செல்போனை காவல்துறையில் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் ஒன்றை கண்டுபிடித்தனர்.

#Shocking..!! பிணவறைக்கு வரும் பெண் உடல்களுடனும், பிணவறைக்குள் நர்சுகளுடன் உல்லாசம்..!! அதிரவைக்கும் வீடியோ

ஒப்பந்த பிணவறை ஊழியராக பணிபுரிந்த சையத், அந்த மருத்துவமனையில் வேலை பார்த்து வந்த நர்சுகள், இளம்பெண்கள் மருத்துமனை பெண் ஊழியர்களுடன் ஆபாசமாக பேசியது, அவர்களுடன் பிணவறையில் உல்லாசமாக இருந்த ஆடியோ மற்றும் வீடியோக்களை தனது செல்போனில் வைத்திருந்துள்ளார். அதேபோல், விபத்து மற்றும் தற்கொலை செய்துகொண்டு இறந்து பிணவறைக்கு வரும் பெண்களின் உடலை நிர்வாணமாக படமும் எடுத்துள்ளார். இந்த வீடியோ பதிவுகளும் அந்த செல்போனில் இருந்துள்ளது.

#Shocking..!! பிணவறைக்கு வரும் பெண் உடல்களுடனும், பிணவறைக்குள் நர்சுகளுடன் உல்லாசம்..!! அதிரவைக்கும் வீடியோ

இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து நடத்திய விசாரணையில், அனைவரிடமும் அன்பாக பழகும் சையத், தனது வலையில் விழும் பெண்கள் மற்றும் நர்சுகளை பிணவறைக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்துள்ளார். தொடர்ந்து பிணவறைக்கு வரும் இளம்பெண்களின் உடல்களை நிர்வாணமாக புகைப்படமும், ஆபாசமாக வீடியோவாகவும் எடுத்து ரசித்து வந்துள்ளதை கண்டு பிடித்துள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் அரசு மருத்துவமனை டீன் கரியப்பாவுக்கு தகவல் அளித்து, வீடியோ எடுத்த சையத் மீது வழக்குப்பதிவு செய்தனர். தற்போது தலைமறைவாக உள்ள சையதை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மேலும், பிணவறை ஊழியர்கள் மற்றும் சையத்துடன் பழகி வந்த நர்சு, பெண் ஊழியர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

’அந்த 7 பேரையும் வெளியே நடமாட விடுவது ஆபத்து’..!! கே.எஸ்.அழகிரி பரபரப்பு பேட்டி..!!

Mon Nov 14 , 2022
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதானவர்களை வெளியே நடமாட விடுவது தவறு என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பேரறிவாளன் முன்னரே விடுவிக்கப்பட்ட நிலையில், மீதமிருந்த 6 பேரையும் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், […]

You May Like