fbpx

சண்டிகர் பல்கலை.சம்பவம்போல் மதுரையில் நடந்த திடுக்கிடும் சம்பவம்…

சண்டிகர் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவத்தை போல மதுரையில் நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சண்டிகரில் 60 பெண்கள் குளித்ததை ஆண் நண்பருக்கு அனுப்பியதாக புகார் எழுந்ததை அடுத்து 4 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது. இதே போல மதுரையில் இளம் பெண் ஒருவர் தனியார் தங்கும் விடுதியில் பிற பெண்கள் குளிப்பதை வீடியோ எடுத்து அனுப்பி வந்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் ஆசிக் . இவர் மருத்துப் படிப்பு முடித்துவிட்டு பஜார் பகுதியில் கிளினிக் நடத்தி வருகின்றார். திருமணமாகி 3 ஆண்டுகள் ஆன நிலையில் இப்படி ஒரு செயலை செய்துள்ளார். கிளினிக் அருகே வசித்து வந்த ஜனனி என்ற பெண் மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி பி.எட் . படித்து வருகின்றார். இவருக்கும் ஆசிக்கிற்கும் பல ஆண்டுகளாக உறவு இருந்துவந்துள்ளது.

இந்நிலையில் பெண்கள் விடுதியில் தங்கி படித்து வரும் ஜனனி சக அறை தோழிகள் குளிக்கும் காட்சிகளை ரகசியமாக குளியல் அறையில் வைத்து வீடியோ எடுத்தும் அவர்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்தும் மதுரையில் உள்ள ஆசிக்கிற்கு அனுப்பி உள்ளார். இதை பெண் ஒருவர் விடுதி காப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதை அறிந்த விடுதி மேலாளர் அண்ணா நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அங்கிருந்து சைபர் கிரை் ஆய்வாளர் வந்து விசாரணை நடத்தினார். அவரது செல்போனை சோதனை செய்தபோது வீடியோக்கள், போட்டோக்கள் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் விசாரணை நடத்தியதில் ஜனனி, ஆசிக்கின் கிளினிக்கில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்துள்ளார். 

திருமணம் ஆன போதும் மருத்துவர் ஆசிக் , ஜனனியுடன் கள்ள உறவு வைத்துக் கொண்டு இருந்துள்ளார். தனது வீடியோக்களையும் ஜனனி ஆசிக்கிற்கு அனுப்பி அவ்வப்போது குதூகலப்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் உடன் தங்கியுள்ள மாணவிகளின் வீடியோக்களை எனக்கு அனுப்பி வைக்க வேண்டும் என கேட்டபோது… இதற்கு சரி என ஒப்புக்கொண்டு ஜனனி இதை ஒரு வேலையாகவே செய்து வந்துள்ளார். இது போல ஏராளமான வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து தொடர்ந்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Post

பென்ஸ் காருடன் மோதிய விபத்தில் இரண்டு ’பீஸ்’ ஆன டிராக்டர் …

Tue Sep 27 , 2022
திருப்பதி அருகே பென்ஸ் காருடன் டிராக்டர் மோதிய விபத்தில் டிராக்டர் இரண்டு ’பீஸ்’ ஆன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே பைபாஸ் சாலையில்இந்த விபத்து ஏற்பட்டது. மேஸ்ஸி ஃபெர்குசன் நிறுவனத்தின் டிராக்டரும் பென்ஸ் காரும் மோதி விபத்திற்குள்ளாது. இந்த விபத்தில் யாருடைய உயிருக்கும் ஆபத்தில்லை என்ற போதிலும் டிராக்டர் ஓட்டுனர் லோசான காயங்களுடன் உயிர்தப்பினர். டிராக்டரும் – பென்ஸும் மோதிக்கொண்ட வேகத்தில் டிராக்டர் இரண்டு துண்டானது.. […]

You May Like