fbpx

துண்டு துண்டாக கிடந்த பெண்ணின் உடல்..!! தலையை தேடிய போலீஸ்..!! பாலத்தின் கீழ் பயங்கர சம்பவம்..!!

கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் லிவிங் டு கெதரில் இருந்த ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலன் அப்தாப் பூனாவாலா வெட்டிப்படுகொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை வீட்டில் ப்ரிட்ஜில் வைத்து தினம் தினம் சில பாகங்களாக டெல்லியின் பல இடங்களில் நாய்களுக்கு வீசினார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

இச்சம்பவத்திற்கு பின் இதேபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகி உள்ளது. அந்த வரிசையில் தற்போது டெல்லியில் பெண்ணின் உடல் துண்டு துண்டாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் கீதா காலனி பகுதியில் துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு விரைந்த போலீசார், பெண்ணின் உடல் பாகங்கள் பல துண்டுகளாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பெண்ணின் தலை பாலத்தின் அருகே கிடைத்தது.

அந்த பகுதியில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் அருகே உள்ள வனப்பகுதியில் பெண்ணின் எஞ்சிய உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், கொலை செய்யப்பட்ட பெண் யார்? பெண்ணை கொலை செய்து உடலை துண்டு துண்டாக வெட்டி உடலை பாலத்தின் அருகே வீசியது யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

உங்க போனில் இந்த ஆப்ஸ் இருக்கா? உடனே இதை செய்து ஆபத்தில் இருந்து தப்பியுங்கள்..!

Wed Jul 12 , 2023
கூகுள் நிறுவனம் தனது கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2 பிரபலமான ஆப்ஸ்களை டெலீட் செய்துள்ளது. இந்த 2 ஆப்ஸ்களை சுமார் 1.5 மில்லியனுக்கும் அதிகமான பயனர்கள் டவுன்லோட் செய்து, இன்ஸ்டால் செய்துள்ளனர். இது ஆபத்தானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இதன் தீவிரம் அதிமாக இருப்பதினால் உடனே இவற்றை டெலீட் செய்யவும் என்று ஆண்ட்ராய்டு பயனர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். பின்வரும் 2 ஆப்ஸ்களில் ஏதேனும் ஒரு ஆப்ஸ் ஆவது உங்கள் போனில் இருந்தால், […]

You May Like