fbpx

ஷாக்கில் ரிப்போர்ட்..!! மதுரையில் ரேபிஸ் நோயால் 32 பேர் உயிரிழப்பு..!! 5 ஆண்டுகளில் 1,33,523 பேருக்கு சிகிச்சை..!!

மதுரை மாநகராட்சி பகுதிகளில் நாய்கள் கடித்து 32 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மதுரை மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் அதிகளவு சுற்றி திரியும் நிலையில், பொதுமக்களை கடித்து காயம் ஏற்படுவதோடு ஏராளமான சிறுவர், சிறுமியர்களும் பாதிக்கப்படுகின்றனர். இந்நிலையில், ஆர்.டி.ஐ., ஆர்வலரான N.G.மோகன் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு நாய்கடி பாதிப்பு சிகிச்சை குறித்த விவரங்களை கேட்டுள்ளார்.

அதில், ”கடந்த 2020 ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை 20,123 பேர் ரேபிஸ் சிகிச்சை பெற்றதோடு, அதில் 10 பேர் ரேபிஸ் நோயால் இறந்துள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் மதுரை மாநகராட்சி பகுதிகளில் வெறிநாய் கடியால் பாதிக்கப்பட்டு மொத்தம் 1 லட்சத்து 33 ஆயிரத்து 523 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரேபிஸ் நோயால் 32 நபர்கள் உயிரிழந்தள்ளதாகவும்” ஆர்.டி.ஐ. மூலம் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து பேசிய RTI ஆர்வலர் மோகன், ”மதுரை மாநகராட்சி பகுதிகளில் அதிகளவுக்கு தெரு நாய்கள் சுற்றி திரிந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சத்துடன் நடமாடுகின்றனர். தெரு நாய்களை கட்டுப்படுத்துவதற்கான கருத்தடை சிகிச்சை அதிகளவிற்கு செய்ய வேண்டும். மாநகராட்சி தரப்பில் கருத்தடை செய்வதாக கூறினாலும் கூட தொடர்ந்து தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும், மாநகராட்சி பகுதிகளில் தெருநாய்கள் எண்ணிக்கை குறித்து உடனடியாக கணக்கீட்டு ஆய்வு நடத்த வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Read More : லிஃப்ட் கொடுத்து பாலியல் துன்புறுத்தல்..!! 18 மாதங்களில் 11 கொலை..!! இறந்தவரின் காலை பிடித்து மன்னிப்புக் கேட்கும் தன்பாலின ஈர்ப்பாளர்..!!

English Summary

Shocking news has emerged that 32 people have died from dog bites in Madurai Corporation areas.

Chella

Next Post

ஷாக்!. லட்சணக்கணக்கான மக்கள் கூடும் மஹா கும்பமேளா!. காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல்!.

Thu Dec 26 , 2024
Maha Kumbh Mela: உத்தரபிரதேசத்தில் அடுத்த மாதம் நடக்கும் மஹா கும்பமேளாவுக்கு காலிஸ்தானி பயங்கரவாதி மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் ஜன.,14ம் தேதி மகர சங்கராந்தியும், ஜன.,29ல் கிருஷ்ண பக்ஷத்தின் அமாவாசையும், பிப்.,3ல் பசந்த் பஞ்சமியும் கொண்டாட இருப்பதால், இந்த நாட்களில் லட்சணக்கணக்கான மக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆனால், கடந்த டிச.,23ம் தேதி பஞ்சாப்பில் உள்ள குர்தாஸ்பூர் காவல்நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல் நடத்தி காலிஸ்தானி […]

You May Like