fbpx

Shocking Report | அந்த கொடூர சம்பவத்திற்கு பிறகு இப்படியா..? பாகிஸ்தானிடம் நன்கொடை பெற்ற கட்சிகள்..!!

தேர்தல் பத்திரங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள நன்கொடை விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 2019ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதல் நடந்த சில வாரத்தில் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றுள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவில் தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்குவது செல்லாது என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது. மேலும், இந்தியாவில் தேர்தல் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்ட 2019 ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 2024 பிப்ரவரி மாதம் 15ஆம் தேதி வரையிலான விவரங்களையும் வெளியிட ஆணையிட்டது. அதாவது தேர்தல் பத்திர நன்கொடை விவரங்களை எஸ்பிஐ இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டும். அதனை தேர்தல் ஆணையம் வரும் 15ஆம் தேதிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதன்படி, நேற்றிரவு இந்திய தேர்தல் ஆணையம் தனது இணையதளத்தில் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடை அளித்தவர்கள், தேர்தல் ஆணையத்தின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகளின் விவரங்களை வெளியிட்டுள்ளது. இந்நிலையில்ம் இந்த பட்டியலில் தற்போது அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணமடைந்தனர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்ப பொறுப்பேற்றது. இந்த பயங்கரவாத அமைப்பு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில வாரங்களில் அதாவது 2019 ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியில் பாகிஸ்தானில் உள்ள கராச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் HUB Power Company என்ற நிறுவனத்திடம் இருந்து தேர்தல் பத்திரம் மூலம் கட்சிக்கு நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. அன்று ஒரே நாளில் இந்த நிறுவனம் மொத்தம் 14 தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை வழங்கியுள்ளது. இதில் 5 பத்திரங்கள் மூலம் தலா ரூ.1 லட்சமும், மீதமுள்ள 9 தேர்தல் பத்திரங்கள் மூலம் தலா ரூ.10 லட்சமும் நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த பணம் அனைத்தும் ஒரே அரசியல் கட்சிக்கு சென்றதா? இல்லை பல அரசியல் கட்சிகளுக்கு சென்றதா? என்பது தெரியவில்லை. இந்த தகவல் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : ஊழியர்களுக்கு Work From Home..!! மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு..!! தண்ணீரின்றி அவதிப்படும் பெங்களூரு..!!

Chella

Next Post

ADMK-வில் கூண்டோடு ஐக்கியமான திமுக, அமமுக, ஓபிஎஸ் அணியினர்..!! மகிழ்ச்சியில் துள்ளிக் குதிக்கும் எடப்பாடி..!!

Fri Mar 15 , 2024
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர். வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது, தொகுதி பங்கீடு, கூட்டணி முடிவு என தேர்தல் களமே பரபரப்பாக காணப்படுகிறது. தமிழ்நாட்டில் திமுகவை பொறுத்தவரை தனது கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கீடு செய்துவிட்டது. மறுபுறம் அதிமுக மற்றும் பாஜக சார்பில் இன்னும் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்றொரு புறம் மாற்றுக்கட்சியினரை தங்கள் பக்கம் […]

You May Like