fbpx

பிறந்தநாள் பார்ட்டியில் துப்பாக்கிச்சூடு!… 6 பேர் உயிரிழப்பு!… மெக்சிகோவில் பயங்கரம்!

வடக்கு மெக்சிகோவில் பிறந்த நாள் பார்ட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வடக்கு மெக்சிகோவின் சோனோரா என்ற மாகாணத்தில் உள்ள சிடெட் ஒபெகன் என்ற நகரத்த்தில் பார்ட்டி ஒன்று நடைபெற்றுள்ளது. 15-வயது சிறுமி ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பலரும் கூடியிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர். படுகாயமடைந்த 20க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல் கட்ட விசாரணையில், பல்வேறு குற்றவழக்குகளில் தொடர்புடைய கிரிமினல் குரூப் ஒன்றின் தலைவர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டதாகவும் அவரை டார்கெட் செய்து இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாகவும் தெரியவந்து இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். மெக்சிகோவில் அதிகாலையில் நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Kokila

Next Post

கர்ப்பிணிகளே எச்சரிக்கை!… இந்த மாத்திரையால் கருச்சிதைவு ஏற்படும்!… ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

Sat Dec 30 , 2023
கர்ப்ப காலத்தில் பெண்கள் பதட்டம் மற்றும் தூக்கமின்மையை குணப்படுத்த பயன்படுத்தும் பென்சோடியாசெபைன் மாத்திரை காரணமாக கருச்சிதைவு ஏற்படும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் ஆராய்ச்சி மூலம் கண்டறிந்துள்ளனர். பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது பதட்டம் மற்றும் தூக்கமின்மை பிரச்னைகளுக்காக பென்சோடியாசெபைன் மாத்திரையை பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். தைவான் தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் பென்சோடியாசெபைன் மாத்திரை பயன்படுத்துவதற்கும் கருச்சிதைவுக்கும் உள்ள தொடர்பு குறித்த ஆய்வை மேற்கொண்டனர். 2004ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரையிலான […]

You May Like