fbpx

வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்திய கடைகள்..! 130 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்..!

சென்னையில் வாடகை செலுத்தாத 130 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சென்னை பாரிமுனை அருகே ரத்தன் பஜார் மற்றும் பிரேசர் பிரிட்ஜ் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான கடைகள் அமைந்துள்ளது. இங்குள்ள ஒரு சில கடைகள் மாநகராட்சிக்கு முறையாக வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்துவதாக கூறப்படுகிறது. இதையத்து, நீண்டகாலமாக வாடகை செலுத்தாமல் உள்ள கடைகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. வாடகை பணம் செலுத்தாததால் சுமார் 40 லட்சம் ரூபாய் வரை நிலுவையில் உள்ளதாக மாநகராட்சி குறிப்பிட்டிருந்தது. இருந்தபோதிலும் கடைகளில் இருந்து வாடகை வரவில்லை.

வாடகை செலுத்தாமல் காலம் தாழ்த்திய கடைகள்..! 130 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல்..!

இதையடுத்து, நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் இருந்த 130 கடைகளுக்கு சென்னை மாநகராட்சி வருவாய்த்துறை அதிகாரிகள் நேரில் சென்று அதிரடியாக சீல் வைத்தனர். வாடகையை வரைவோலையாக சம்மந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்கள் செலுத்தும் பட்சத்தில் சீல் அகற்றப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மாநகராட்சி அதிகாரிகள் திடீரென வந்து கடைகளை பூட்டி சீல் வைத்து சென்றதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Chella

Next Post

உஷார்... கொரோனா பாதிப்பு எண்ணிக்கை.‌.. நேற்று ஒரே நாளில் எத்தனை பேருக்கு தெரியுமா....?

Wed Aug 17 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 9,062 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 36 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும் 15,040 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளன.. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

You May Like