fbpx

சென்னை வந்தடைந்தது பாடகி பவதாரிணியின் உடல்..!! சொந்த ஊரில் இறுதிச்சடங்கு..!!

பிரபல பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரிணி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 47 வயதான பவதாரிணி, கடந்த சில மாதங்களாக இலங்கையில் இயற்கை முறை சிகிச்சை மேற்கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. தற்போது மீண்டும் இலங்கை சென்ற அவர் சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார்.

இவரது இந்த திடீர் மறைவுச் செய்தியை அறிந்து திரையுலகினர், அரசியல் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். திருமணமான இவருக்கு குழந்தைகள் இல்லை. இந்நிலையில், இவரது உடல் இன்று சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை தி.நகர் முருகேசன் தெருவில் உள்ள இசைஞானி இளையராஜாவின் வீட்டில் இன்று மாலை 6 மணிக்கு அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ள பவதாரிணியின் உடல், நாளை அடக்கம் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பாடகி பவதாரிணி உடல் இன்று இரவு தேனி மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பவதாரிணியின் இறுதிச்சடங்கு சொந்த ஊரில் நடைபெறும் நிலையில், இளையராஜா தேனிக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

Chella

Next Post

செம குட் நியூஸ்..!! பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதிய உயர்வு..!! தமிழ்நாடு அரசு அறிவிப்பு..!!

Fri Jan 26 , 2024
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் 12,105 பகுதி நேர ஆசிரியர்களுக்கு தலா ரூ.2,500 ஊதியம் உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2012ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், தையல், தோட்டக்கலை உள்ளிட்ட 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் ரூ. 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இதையடுத்து, 2014ஆம் ஆண்டு ரூ. 2 ஆயிரம் ஊதியம் உயர்த்தப்பட்டது. கடந்த 2021ஆம் ஆண்டு அதிமுக […]

You May Like