சென்னை தீவுத்திடலில் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், அனைத்து பகுதிகளிலும் பட்டாசு விற்பனை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அந்தவகையில், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் தற்காலிக சிறப்பு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னையில் சிவகாசியை சேர்ந்த சில முன்னணி நிறுவனங்கள் தற்காலிக சிறப்பு கடைகளை வைத்து மக்களுக்கு தள்ளுபடி விலையில் பட்டாசுகளை விற்பனை செய்து வருகின்றன.

இங்கு அக்டோபர் 21ஆம் தேதிக்குள் முன்கூட்டியே வந்து பட்டாசு வாங்குபவர்களுக்கு 25% தள்ளுபடி வழங்கப்படுவதாக கடைகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த கடையில் பட்டாசு வாங்கினாலும் ஒரே விலையில் கிடைக்கும். மேலும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, கூகுள் பே போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனைகளும் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.