fbpx

’மூன்றரை மணி நேரம் மட்டுமே தூக்கம்’..!! ’மாலை 6 மணிக்குள் சாப்பாடு..!! பிரதமர் மோடியின் சுவாரஸ்ய தகவல்..!!

பிரதமர் மோடி தினமும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குகிறார் என்பது போன்ற சுவாரஸ்ய தகவலை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதமர் மோடி 8 எம்.பிக்களை அழைத்து மதிய உணவுடன் உரையாடல் நடத்தினார். அவர் அழைத்த 8 எம்.பிக்களில் பாஜக மட்டுமல்லாமல் பிற கட்சிகளை சேர்ந்தவர்களும் உள்ளனர். அதன்படி, மோடியுடன் 8 எம்.பிக்கள் மதிய உணவு சாப்பிட்டுள்ளனர். அப்போது மோடியிடம் தங்களை ஏன் அழைத்தீர்கள் என்று கேள்வி எழுப்பிய போது, “உங்களை நான் தண்டிக்கப் போகிறேன், என்னுடன் வாருங்கள்” என்று விளையாட்டாக பதில் அளித்துள்ளார்.

பிரதமர் மோடியின் சந்திப்பிற்கு பிறகு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேசுகையில், “நாங்கள் மோடியுடன் மதிய உணவு சாப்பிட்டோம். எங்களுக்கு அரிசி, கிச்சடி, பனீர், பருப்பு, ராகி உள்ளிட்ட உணவுகள் வழங்கப்பட்டது. சாப்பிட்டு முடித்ததும் மோடியே அதற்கான பில்லை கொடுத்துவிட்டார். பிரதமர் மோடி எந்தவொரு பாகுபாடும் இல்லாமல் நாடாளுமன்ற கேண்டீனில் எங்களுடன் சேர்ந்து மதிய உணவு சாப்பிட்டார். அப்போது அவருடைய தினசரி பழக்க வழக்கங்கள் பற்றியும் எடுத்துரைத்தார்.

பிரதமர் மோடி எங்களுடன் 45 நிமிடம் பேசியது எங்களுக்கு உத்வேகத்தை கொடுத்தது. அவர் தினமும் வெறும் மூன்றரை மணிநேரம் மட்டுமே உறங்குவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் எந்தவொரு உணவையும் எடுத்துக் கொள்வது இல்லை என்றும் எங்களிடம் கூறினார்” என்றார்.

Chella

Next Post

ரேஷன் கடையில் உங்கள் குடும்ப நபர்களின் விபரங்களை சரிபார்ப்பு செய்தீர்களா.? தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு.!

Mon Feb 12 , 2024
குடும்ப அட்டைதாரர்களின் விரல் ரேகையை சரி பார்க்க ரேஷன் கடைக்கு எப்போது வேண்டுமானாலும் செல்லலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. விரல் ரேகை சரிபார்ப்பு செய்யாதவர்களின் பெயர்கள் ரேஷன் அட்டையில் இருந்து நீக்கப்படும் என்று வந்த வதந்தி பொய்யானது என்று தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது. 06.02.2024 மற்றும் 07.02.2024 அன்று வெளிவந்த சில நாளேடுகளில், பிப்ரவரி மாத இறுதிக்குள் குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரின் கைரேகையையும் சரிபார்ப்பு […]

You May Like