fbpx

அண்ணனுடன் சந்தோசமாக சென்ற சிறுவன்; பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்..

நத்தம் அருகே பட்டணம்பட்டியை சேர்ந்தவர் 40 வயதான அழகன். கொத்தனாரான இவருக்கு 3 மகன்கள் உள்ளனர். அழகனின் 3-வது மகன் 8 வயதான கர்ணன். சம்பவத்தன்று, சிறுவன் தனது சகோதரருடன் டிராக்டரில் சென்றுள்ளான். மேலும், சிறுவனின் சகோதரனின் மோட்டார்சைக்கிளில் பெட்ரோல் இல்லாததால், அந்த வண்டியை டிராக்டரில் கட்டி இழுத்து சென்றுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர ஆற்று பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இதனால், டிராக்டரில் அமர்ந்து இருந்த சிறுவன் கர்ணன் கீழே விழுந்து பலத்த காயமடைந்துள்ளான்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், ஆபத்தான நிலையில் கிடந்த சிறுவனை நத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்த தகவலின் பேரில், நத்தம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் உயிரிழந்ததை அடுத்து, சிறுவனின் பெற்றோர் கதறி அழுத சம்பவம் அப்பகுதயில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Maha

Next Post

"அம்மா வேணும்" ரோட்டில் கதறி அழுத 2 வயது குழந்தை; குடும்ப தகராறில் தந்தை செய்த காரியம்..

Mon Oct 9 , 2023
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே ஆறகலூர் கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான சின்னதுரை. பைக் மெக்கானிக் வேலை செய்து வரும் இவருக்கும், இவரது மனைவிக்கும் குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோவத்தில் இருந்த சின்னதுரை, தனது 2 வயது மகனை பைக்கில் வைத்துக்கொண்டு, 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சின்னசேலம் பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் தனது குழந்தையை விஜயபுரம் வேதவள்ளி மாரியம்மன் கோயில் பகுதியில் தனியாக விட்டு சென்றுள்ளார். இதனால் […]

You May Like