ஆளில்லாத 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் மணிப்பூர் மாநிலத்தில் மீண்டும் பதற்றம் நிலவுகிறது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக இரண்டு பழங்குடியின சமூகங்களுக்கு இடையே வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இணைய சேவையும் முடங்கியது. தற்பொழுது நிலைமையை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் சூழல் நிலவு வந்தது.
இம்பால் பள்ளத்தாக்கிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மெய்டீஸ் மற்றும் மலைகளில் குடியேறிய குக்கி பழங்குடியினருக்கு இடையே, மெய்டீஸ் பட்டியல் பழங்குடியினர் (ST) பிரிவின் கீழ் சேர்க்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையின் பேரில் தொடர்ந்து இனக்கலவரம் நடந்து வந்தது.
மே 3 ஆம் தேதி தொடங்கிய மோதலில் இருந்து 90 க்கும் மேற்பட்ட நபர்கள் உயிரிழந்துள்ளனர். சமீபத்தில் பழங்குடியின பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெறும் பரபரப்பை கிளப்பியதை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் இது நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் ஆளில்லாத 3 வீடுகளுக்கு தீவைக்கப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. மேலும் முன்னாள் அமைச்சர் வீட்டுக்கு காவலுக்கு இருந்த பாதுகாப்பு வீரர்களிடம் இருந்து ஆயுதங்களையும் பறித்து சென்றுள்ளனர். இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.