fbpx

கடந்த 24 மணி நேரத்தில் இத்தனை குற்றச் சம்பவங்களா..? யாருக்குமே பாதுகாப்பு இல்லை..!! லிஸ்ட் போட்ட எடப்பாடி..!!

திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் நடந்த குற்றச்செய்திகளை பட்டியலிட்டு காட்டியுள்ளார்.

● செங்கல்பட்டில் பள்ளி மாணவர்கள் கடத்தல்.

● புதுக்கோட்டையில் மர்ம நபர்களால் இளைஞர் வெட்டிப் படுகொலை.

● தஞ்சாவூர் மங்களபுரம் பகுதியில் 21 வயது இளைஞர் வெட்டிப்படுகொலை.

● தேனியில் குண்டர் சட்டத்தில் சிறை சென்று வந்தவரை கொடிய ஆயுதங்களுடன் ஒரு கும்பல் கொல்ல முயற்சி.

இனி இந்த விடியா திமுக அரசின் முதல்வரிடம் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வலியுறுத்தி எந்த பயனும் இல்லை. எனவே, மக்கள் பணியில் தான் நீங்களும் உள்ளீர்கள் என்ற அர்ப்பணிப்போடு தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கைக் காக்க காவல்துறை அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கிறேன். விடியா திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று உறுதியாகிவிட்டது. மக்களே, நமக்கு நாமே பாதுகாப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read More : மறைந்த ஆம்ஸ்ட்ராங் வீட்டில் முதல்வர் ஸ்டாலின்..!! மனைவி, குடும்பத்தாருக்கு ஆறுதல்..!!

English Summary

AIADMK General Secretary Edappadi Palaniswami has alleged that nobody in Tamil Nadu is safe under DMK rule.

Chella

Next Post

இனி இந்த திட்டத்திற்கு கூடுதல் பணம் கிடைக்கும்..!! மத்திய அரசு சூப்பர் அறிவிப்பு..!! மக்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

Tue Jul 9 , 2024
A family cover of Rs 5 lakh per annum will now be increased to Rs 10 lakh.

You May Like