fbpx

சீட்பெல்ட் அணியாததால் இத்தனை உயிரிழப்புகளா..? வாகன ஓட்டிகளே இனியாவது கவனமா இருங்க..!!

2021ஆம் ஆண்டு நாடு முழுவதும் நேரிட்ட விபத்துகளில் உயிரிழந்த 83% பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்தாண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்த 19,811 பேரில் 16,397 பேர் காரில் சீட்பெல்ட் அணியாமல் பயணம் செய்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்துகளில் உயிரிழந்தவர்களில் 83% பேர் சீட்பெல்ட் அணியாமல் சென்றவர்கள் என்றும், அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் சீட்பெல்ட் அணியாமல் காரில் பயணித்த 3,863 பேர் சாலை விபத்தில் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

சீட்பெல்ட் அணியாததால் இத்தனை உயிரிழப்புகளா..? வாகன ஓட்டிகளே இனியாவது கவனமா இருங்க..!!

மத்தியப்பிரதேசத்தில் 1,737 பேரும், ராஜஸ்தானில் 1,370 பேரும் சீட்பெல்ட் அணியாமல் சென்றதால் உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் 45% பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 6,445 பேர் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் பலியானதாகவும், தமிழகத்தில் 5,888 பேரும், ராஜஸ்தானில் 4,966 பேரும் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் மரணமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்தாண்டு சாலை விபத்துகளில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பாதாசரிகளில் இறப்பு 30% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹெல்மெட் அணியாமல் சென்றதால் நேரிட்ட சாலை விபத்துகளில் 64% பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், 74 சதவீதம் பேர் மூளை சாவு அடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பொது இடங்கள், கடற்கரைகளில் கூட்டம் கூட தடை..!! வீடுகளில் குடும்பத்துடன் புத்தாண்டை கொண்டாடுங்கள்..!! காவல்துறை எச்சரிக்கை

Thu Dec 29 , 2022
புத்தாண்டை முன்னிட்டு நாளை மறுநாள் இரவு பொது இடங்களிலும் கடற்கரைகளிலும் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுமென காவல்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ”நாளை மறுநாள் நள்ளிரவு பொதுமக்கள் மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்க வேண்டும். இதேபோல் நாளை மறுநாள் இரவும், புத்தாண்டின் போதும் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக்கூடாது. புத்தாண்டு கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் கைது செய்யப்படுவதுடன் […]
’முதலும் முடிவும்’..!! புத்தாண்டை முதல் மற்றும் கடைசியில் வரவேற்கும் நாடுகள் எது தெரியுமா..? சுவாரஸ்ய தகவல்கள்..!!

You May Like