fbpx

சாவுக்கு காரணமான சமூக வலைதள காதல்..!! கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்..!!

மருத்துவக் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.

ஆந்திரா மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால், அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்துள்ளார். இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு, இது காதலாக மாறியது. இதையடுத்து, இருவரும் நெருங்கி பழகி வந்துள்ளனர். இந்நிலையில், சமீபத்தில் காதல் ஜோடிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட்டு மாணவி அவரை விட்டு பிரிந்துச் சென்றுவிட்டார்.

சாவுக்கு காரணமான சமூக வலைதள காதல்..!! கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்..!!

ஆனால், ஞானேஸ்வரன் மாணவியை தொந்தரவு செய்து வந்தார். அவரின் தொல்லை காரணமாக அவரை அந்த ஊரை விட்டு வேறொரு கிராமத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், இருவருக்கும் இடையில் உள்ள பிரச்சனையை சரி செய்ய தபஸ்வியின் தோழி முடிவு செய்து இருவரையும் பேச்சுவார்த்தை நடத்த அழைத்துச் சென்றனர். இருவருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை ஒரு கட்டத்தில் வாக்குவாதமாக மாறவே அந்த மாணவி வேறொருவரை திருமணம் செய்து கொள்ள போவதாக தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த அவர் காதலியின் கழுத்தை பிளேடால் அறுத்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது தோழி, கத்தி கூச்சலிட்டதை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர்.

சாவுக்கு காரணமான சமூக வலைதள காதல்..!! கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொன்ற காதலன்..!!

அதற்குள்ளாகவே அதே பிளேடால் ஞானேஸ்வரன் தற்கொலைக்கு முயன்றார். இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ஞானேஸ்வரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

கார்த்திகை தீபம் ஏற்றுவதில் பிரச்சனை..!! ஓபிஎஸ்-திமுகவினர் கடும் மோதல்..!! பக்தர்கள் எரிச்சல்..!!

Wed Dec 7 , 2022
இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை தீபம் யார் ஏற்றுவது என்பதில் ஓபிஎஸ் குடும்பத்தினருக்கும் திமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டி பகுதியில் மலை மேல் அமைந்துள்ளது கைலாசநாதர் திருக்கோயில். இந்த கோயில் பல ஆண்டுகளாக பாழடைந்து பராமரிப்பின்றி இருந்து வந்தது. கடந்த 2002இல் ஓபிஎஸ் அரசியல் வளர்ச்சிக்குப்பின் அவர் மற்றும் அவரது குடும்பத்தாரின் முயற்சியால் சொந்த செலவில் கோயில் புனரமைப்பு […]
கார்த்திகை தீபம் ஏற்றுவதில் பிரச்சனை..!! ஓபிஎஸ்-திமுகவினர் கடும் மோதல்..!! பக்தர்கள் எரிச்சல்..!!

You May Like