புதுச்சேரியில் உள்ள குருசுக்குப்பத்தை சேர்ந்தவர் முகுந்தன் (23). இவர் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (18) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். விழுப்புரம் மாவட்டம் பட்டானூர் கலைவாணர் நகரில் முகுந்தனின் மாமியார் கோமதி, வீடு எடுத்து வசித்து வருகிறார். கோமதி வீட்டின் எதிரிலேயே முகுந்தனும் ரம்யாவும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். இந்நிலையில், மாமியார் கோமதிக்கும், தேவா (23) என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் தனிமையில் சந்தித்து அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
அப்போது மாமியாரின் வீட்டில் தேவா இருந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த முகுந்தன் கோமதி மற்றும் தேவாவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் கோபம் அடைந்த தேவா, அப்போது எதுவும் பேசாமல் அங்கிருந்து சென்றுவிட்டாராம். இரவு முழுவதும் கடும் கோபத்தில் இருந்த தேவா, மறுநாள் அதிகாலை 4 மணியளவில் மீண்டும் முகுந்தன் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு முகுந்தனை ஆவேசமாக திட்டியபடி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில், படுகாயம் அடைந்த முகுந்தன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, தேவா அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். தன் கணவரின் நிலையை கண்டு ரம்யா அதிர்ச்சியடைந்து, அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். பின்னர், அங்கு ஓடிவந்த அக்கம்பத்தினர், உடனே போலீசுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வங்க போலீசார் முகுந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த தேவாவை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.