fbpx

விரைவில் இந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாக “சர்க்கரை” வழங்கப்படும்..! எந்த மாநிலத்தில் தெரியுமா…

சமூகத்தின் மிகவும் விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு தற்போது கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு வருகிறது, இந்நிலையில் இவர்கள் மேலும் பயன் பெரும் வகையில் தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவசமாக சர்க்கரையும் வழங்க டெல்லி அரசு திட்டமிட்டிருந்தது.

இந்நிலையில் நேற்றையதினம் சிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு இலவச சர்க்கரை வழங்க டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் திநேற்றைய தினம் இது தொடர்பான அமைச்சரவை முடிவுக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, இனி விளிம்புநிலைப் பிரிவினரான தேசிய உணவு பாதுகாப்பு அட்டைதாரர்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக விரைவில் வழங்கப்படவுள்ளது.

அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலவச சர்க்கரை வழங்கப்படும். இந்த சலுகை ஜனவரி 2023 முதல் டிசம்பர் 2023 வரை ஒரு வருட காலத்திற்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன்மூலம் டெல்லியில் உள்ள 68,747 தேசிய உணவுப் பாதுகாப்பு அட்டைதாரர்கள் மற்றும் மொத்தம் 2,80,290 தனிநபர்கள் பயனடைவார்கள். இம்முயற்சிக்கான நிதி ஒதுக்கீடு ரூ.111 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது என முதலமைச்சர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Kathir

Next Post

வெங்காயம் கிலோ ரூ.25-க்கு விற்பனை செய்ய வேண்டும்‌...! மத்திய அரசு அதிரடி உத்தரவு...!

Tue Aug 22 , 2023
வெங்காயத்தை சில்லறை  விலையில் கிலோ ரூ.25 க்கு  விற்கும் என‌ NCCF தெரிவித்துள்ளது. இந்தியாவில்3.00 லட்சம் மெட்ரிக் டன் கொள்முதல் இலக்கை எட்டிய பின்னர், முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த ஆண்டு வெங்காயத்தின் இருப்பு அளவை 5.00 லட்சம் மெட்ரிக் டன்னாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக, நுகர்வோர் விவகாரத் துறை NCCF மற்றும் நாஃபெட் ஆகியவற்றுக்கு தலா  1 லட்சம் டன் கொள்முதல் செய்து கூடுதல் கொள்முதல் இலக்கை அடையவும், கொள்முதல் செய்யப்பட்ட இருப்புகளை முக்கிய நுகர்வு மையங்களில் அளவீடு செய்து விநியோகிக்கவும்  அறிவுறுத்தியுள்ளது. சில்லறை விலைகள் அகில இந்திய சராசரியை விட அதிகமாகவும் அல்லது முந்தைய மாதத்தை விட கணிசமாக அதிகமாகவும் இருக்கும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள  முக்கிய சந்தைகளை குறிவைத்து,  இருப்பிலிருந்து வெங்காயத்தை அகற்றுவது  தொடங்கியுள்ளது. தற்போதைய  நிலவரப்படி, இருப்பிலிருந்து சுமார் 1,400 மெட்ரிக் டன் வெங்காயம் இலக்கு  சந்தைகளுக்கு அனுப்பப்பட்டு, அங்கு கிடைப்பதை அதிகரிக்க தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகிறது. முக்கிய சந்தைகளில் வெளியிடுவதைத் தவிர, இருப்பிலிருந்து வெங்காயம்  சில்லறை நுகர்வோருக்கு ஒரு கிலோ  ரூ.25/- என்ற மானிய விலையில் நாளை முதல் அதாவது 21 ஆகஸ்ட் 2023 திங்கள் முதல் சில்லறை விற்பனை நிலையங்கள் மற்றும் நடமாடும் வேன்கள் மூலம் கிடைக்கிறது. வெங்காயத்தின் சில்லறை விற்பனை வரும் நாட்களில் பிற முகவர்கள் மற்றும் மின் வணிக தளங்களை  ஈடுபடுத்துவதன் மூலம் பொருத்தமான  முறையில் அதிகரிக்கப்படும்.  வெங்காயம் கொள்முதல் செய்தல்,  இருப்புகளை இலக்கு வைத்தல் மற்றும்  ஏற்றுமதி வரி விதித்தல் போன்ற அரசு எடுத்துள்ள பன்முக நடவடிக்கைகள் வெங்காய விவசாயிகளுக்கு லாபகரமான விலையை உறுதி செய்வதன் மூலம் விவசாயிகளுக்கும் நுகர்வோருக்கும் பயனளிக்கும், அதே நேரத்தில் நுகர்வோருக்கு மலிவு விலையில் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யும்.

You May Like