சென்னை செல்வதற்காக நேற்றிரவு மதுரை விமான நிலையம் வந்த ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவீர்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “வாய்ப்பிருந்தால் உறுதியாக டிடிவி தினகரனுடன் இணைந்து செயல்படுவேன்” என்றார். மேலும், கூடிய விரைவில் சசிகலாவை சந்திக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து, எடப்பாடி நடத்திய பொதுக்குழு ஆரம்பத்தில் இருந்து இன்று வரை சட்ட நியதிக்கு புறம்பாகவே நடைபெற்று வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும் என்றார். உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்த கேள்விக்கு, மக்கள் தீர்ப்பை எதிர்நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்றார் ஓபிஎஸ். முன்னாள் அமைச்சர்கள் பரபரப்பாக பேட்டி தருகிறார்களே என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காமல் சென்றார்.