fbpx

தென்மேற்கு பருவமழை..! கரையோர மக்களுக்கு பாதுகாப்பு..! ஆட்சியர்களுக்கு அதிரடி உத்தரவு..!

தென்மேற்கு பருவமழை கடந்த 3 மாதங்களில் இயல்பை விட அதிகம் பெய்துள்ள நிலையில், காவரி கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த ஜூன் முதல் ஆகஸ்ட் வரை இயல்பைவிட 87 விழுக்காடு கூடுதல் மழை பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். காவிரி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாத்திட தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு காவிரி ஆற்றுப்படுகை அமைந்துள்ள அனைத்து மாவட்டங்களின் ஆட்சியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்

ஈரோடு, நாமக்கல், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கண்காணிப்பு அதிகாரிகள் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த 4 மாவட்டங்களுக்கு மாநில பேரிடர் மீட்புப் படை குழுவினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மழை வெள்ள பாதிப்பு புகார்களை 1070, 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸ்அப் மூலம் தெரிவிக்கலாம்” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

3-வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி..! தாயின் சேலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்..!

Fri Sep 2 , 2022
சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தில் மாணவி உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குலசேகரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அமல்ராஜ் – வெண்ணியார் தம்பதி. இவர்களுக்கு ராஜலட்சுமி (21) என்ற மகளும், உதய ஜோதி (19) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இதில், ராஜலட்சுமி கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். இந்த […]
3-வது முறையாக நீட் தேர்வு எழுதிய மாணவி..! தாயின் சேலையில் உயிரை மாய்த்துக் கொண்ட சோகம்..!

You May Like