fbpx

Truecaller மூலம் வரும் SPAM கால்!… வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!… தடுப்பது எப்படி?

Truecaller மூலம் சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களில் இருந்து வரும் SPAM கால்கள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே, வாட்ஸ்அப் பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா, மலேசியா, இந்தோனேசியா , கென்யா, வியட்நாம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான பயனர்களால் வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் செய்திகளை பரிமாறிக்கொள்வதோடு, மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் அழைப்புகளைச் செய்துகொள்ள முடியும். இந்த வசதி மோசடி மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மிகவும் எளிதான வழியாக மாறியுள்ளது.

எனவே, இதைப்போல வெளிநாடு எண்களில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்கவேண்டாம். இதனால் மோசடி செய்பவர்கள் பயனரின் வங்கி கணக்கிலிருந்து பணத்தைத் திருடுவதற்காக பயனர்களின் ரகசிய தகவலை பெற முயற்சி செய்கிறார்கள். ஆகவே, இதுபோல ஏதெனும் சைபர் தாக்குதலை எதிர்கொண்டால், அதனை cybercrime.gov.in என்ற இணையதளத்தில் தெரிவிக்கலாம் என்று மத்திய உள்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

இதனையடுத்து, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) பயனர்களுக்கு வரும் சர்வதேச ஸ்பேம் அழைப்புகள் தொடர்பான பிரச்சனை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உள்ளது என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்தார். மேலும், நாங்கள் ஏற்கனவே வாட்ஸ்அப் நிறுவனத்திடம் எங்களது கேள்விகளை கேட்டுளோம் என்றும் பயனர்களின் பாதுகாப்பு மற்றும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவது வாட்ஸ்அப் நிறுவனத்தின் பொறுப்பாகும். ஒரு சிக்கல் என்னவென்றால், இந்த எண்கள் எவ்வாறு வெளியேறுகின்றன என்பது இன்னமும் தெரியவில்லை, என்று சந்திரசேகர் கூறியுள்ளார்.

வாட்ஸ் அப்பில் ட்ரூகாலர் ஸ்பேம் பயன்படுத்துவது எப்படி? கூகுள் ப்ளே ஸ்டோரில் ட்ரூகாலர் என்று தேட வேண்டும். லிஸ்டிங் பேஜை கீழே ஸ்க்ரோல் செய்து, பீட்டா சோதனையாளர் பிரிவின் கீழ் உள்ள ஜாயின் என்கிற பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். சிறிது நேரம் காத்திருந்து, பிளே ஸ்டோரில் மீண்டும் ட்ரூகாலரை தேட வேண்டும். பீட்டா அப்டேட்டை இன்ஸ்டால் செய்ய வேண்டும். ட்ரூகாலரை திறந்து செட்டிங்ஸ் என்பதற்கு செல்ல வேண்டும். அழைப்பாளர் ஐடியை டேப் செய்து, வாட்ஸ் அப் மற்றும் பிற மெசேஜிங் செயலிகளில் தெரியாத எண்ணை அடையாளம் காண டோக்ள் செய்ய வேண்டும்.

Kokila

Next Post

எங்க தல தோனியை யாரும் நெருங்கக்கூட முடியாது!... முதலிடத்தில் டெத் ஓவர்களின் King!... ரெக்கார்ட்ஸ் இதோ!

Fri May 12 , 2023
ஐபிஎல் வரலாற்றில் டெத் ஓவர்களில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தல தோனி முதலிடத்தில் உள்ளார். ஐபிஎல் என்றாலே அதிகளவில் ரசிகர்களை வைத்திருப்பது சென்னை அணி தான். சென்னை அணிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருப்பதற்கு முக்கிய மற்றும் முதன்மை காரணம் தோனியே ஆகும். எப்போதும் அனைவரின் மனதிலும் தோனிக்கு என ஒரு தனியிடம் உண்டு. அதிலும் குறிப்பாக சென்னை சிஎஸ்கே அணியின் […]

You May Like