fbpx

திமுகவின் தடையை மீறி கோயில்களில் சிறப்பு பூஜை, அன்னதானம்..!! உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை..!! அண்ணாமலை அதிரடி..!!

ஆலய நடைமுறைகளில் தலையிட திமுக அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது?

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில், “நாளைய தினம் அயோத்தியில் ராமர் சிலை, பிரதமர் மோடியால் பிரதிஷ்டை செய்யப்படுவதை அடுத்து, நாடே விழாக்கோலம் பூண்டுள்ளது. சாதி மத வேறுபாடின்றி, மக்கள் அனைவரும் இந்த புண்ணிய தினத்தை வரவேற்கின்றனர். இதனை முன்னிட்டு முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள ஆலயங்கள் அனைத்திலும் சிறப்புப் பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், மதச்சார்பற்ற அரசு நடத்துகிறோம் என்ற பெயரில் இந்துமத விரோதச் செயல்பாடுகளையே முழு வேலையாகக் கொண்டிருக்கும் திமுக அரசு, தமிழக ஆலயங்களில் சிறப்புப் பூஜைகளுக்கும், அன்னதானத்துக்கும் தடை விதித்துள்ளதாகத் தெரிகிறது. ஆலய நடைமுறைகளில் தலையிட அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? மேலும், ராமர் சிலை நிறுவப்படுவதை முன்னிட்டு, தமிழக கோயில் நிர்வாகம் சார்பிலோ, பொதுமக்கள் சார்பிலோ, எந்த நிகழ்ச்சியும் நடத்தக் கூடாது என்றும், பொதுமக்கள் கண்டுகளிக்க பெரிய திரை வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யக் கூடாது என்றும் காவல்துறையினர் தடுப்பதாகவும் கூறப்படுகிறது.

தமிழக கோயில்கள் பக்தர்களுக்குச் சொந்தமானவை. ஆலய நடைமுறைகளில் தேவையில்லாமல் தலையிடவோ, வழிபடும் முறைகளில் குறுக்கிடவோ திமுக அரசுக்கு எந்த உரிமையுமில்லை. இந்து மத மக்களின் அடிப்படை உரிமையான ஆலய வழிபாட்டைத் தடுப்பதை, மாற்று மத மக்களே விரும்ப மாட்டார்கள். யாரை திருப்திப்படுத்த இந்த பிரிவினை முயற்சியில் ஈடுபடுகிறது திமுக அரசு? மாதம் ஒருமுறை இந்து மத மக்களைச் சீண்டிப் பார்க்கும் அற்பச் செயல்பாடுகளை திமுக கைவிட வேண்டும். திமுகவின் தடையை மீறி, அயோத்தி ராமர் கோயில் விழாவுக்காக, தமிழகக் கோயில்களில் சிறப்பு பூஜைகளும், அன்னதானம் உள்ளிட்ட அறப்பணிகளும் தொடரும்” என்று பதிவிட்டுள்ளார்.

Chella

Next Post

பென்சிலின் நுனியில் ராமர் சிலை!… உலகின் மிகச்சிறிய சிலை இதுதான்!

Sun Jan 21 , 2024
கின்னஸ் சாதனை படைத்த ராஜஸ்தானை சேர்ந்த சிற்பி நவரத்தின பிரஜாபதி கலைஞர், பென்சிலின் நுனியில் ராமர் சிலையை உருவாக்கி அசத்தியுள்ளார். ராமர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. அனைத்து சாஸ்திர நெறிமுறைகளையும் பின்பற்றி, பிற்பகல் அபிஜீத் முஹூர்த்தத்தில் கும்பாபிஷேகம் ஏற்பாடு செய்யப்படும். கடந்த 16ம் தேதிமுதல் தற்போதுவரை கும்பாபிஷேகத்திற்கான சடங்குகள் நடந்து வருகிறது. இதற்காக பல்வேறு மாநிலங்கள் விடுமுறையும் அளித்துள்ளன. மேலும், கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பரிசுப்பொருட்களும், நன்கொடைகளும் ராமர் […]

You May Like