காசியாபாத்தில் வேகமாக வந்த கார் மாணவர்களை இடித்து தூக்கி வீசும் பயங்கரமான காட்சிகள் வைரலாகி வருகின்றது ..
உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் மாணவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மாணவர்கள் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது சாலையில் எதிரே கார் ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. இதைப் பார்த்து சில மாணவர்கள் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டனர்.
சில மாணவர்கள் அந்த இடத்திலேயே நின்று கொண்டு கார் வருவதை கவனிக்காமல் சண்டையிட்டுக் கொண்டே வருகின்றனர். அல்லது அவர்கள் அந்த கார் ஒதுங்கிச் சென்றுவிடும் என நினைத்திருக்கலாம். ஆனால் கார் வேகமாக வந்து இருவர் மீதும் மோதியது. இதில் மாணவர்கள் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தனர். இந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது..
விபத்தை ஏற்படுத்திய காரை மாணவர்கள் பிடித்து வைத்தனர். தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த காரை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இது குறித்து காசியாபாத் போலீசார் கூறுகையில் , ’’ மாணவர்கள் மீது கார் ஏற்றிய நபருக்கு கட்டாயம் உரிய தண்டனை கிடைக்கும். மேலும் தகராறில் ஈடுபட்ட மாணவர்களையும் கைது செய்துள்ளோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகின்றது. எதற்காக தகராறு நடந்தது என விசாரணை நடத்தி பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.