fbpx

மேடையில் ஆடியபோது சுருண்டு விழுந்து நடனக்கலைஞர் உயிரிழப்பு .. நடனத்தின் ஒரு பகுதி என நினைத்த மக்கள்…

ஜம்மு காஷ்மீரில் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்தபோதே மாரடைப்பு ஏற்பட்டு நடனக்கலைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஜம்மு காஷ்மீரில் பிஷன்னா பகுதியைச் சேர்ந்தவர் யோகேஷ் குப்தா. நேற்று நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் மாறுவேடமிட்டு நடனமாடியுள்ளார். பார்வதியாக வேடமிட்டு நடமாடிக் கொண்டிருந்தபோதே திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆடிக்கொண்டிருந்தபோதே அவர் திடீரென சுருண்டு விழுந்துள்ளார். நடன நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருந்த பலரும் அதை நடனத்தின் ஒரு பகுதி என்றே நினைத்துள்ளனர். நீண்ட நேரமாக எழுந்திரிக்காததால் சிறிது நேரம் கழித்தே சக நடனக் கலைஞர்கள் சென்று அவரை தட்டி எழுப்பி உள்ளனர். ஆனால் வெகு நேரமாக முயற்சித்தும் அவர் எழுந்திருக்கவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் அதிர்ந்து போனார்கள். இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகின்றது.

https://twitter.com/SajidRaja176/status/1567803345041080321?s=20&t=PnKUsPUWvi5Dn0YQ9VDx4w

Next Post

சித்தி 2 சீரியல் நடிகருடன் ராஜ்கிரண் மகள் காதல்திருமணம் ? .. நடிகர் ராஜ்கிரன் விளக்கம் …

Thu Sep 8 , 2022
சீரியல் நடிகரை காதலித்து அவருடன் சென்றுவிட்டதாக சமூக வலைத்தலங்களில் வெளியான செய்தி குறித்து நடிகர் ராஜ்கிரண் விளக்கமளித்துள்ளார். சென்னையைச் சேர்ந்த சீரியல் காமெடி நடிகர் முனீஸ் ராஜா. இவர் நாதஸ்வரம் , சித்தி 2 உள்ளிட்ட  சீரியல்களில் காமெடி ரோலில் நடித்தவர். இவரது நடிகர் ராஜ்கிரன் மகளை திருமணம் செய்து கொண்டதாக போட்டோக்கள் மற்றும் தகவல்கள் சமூக வலைத்தலங்களில் உலா வந்தன. தந்தைக்கு தெரியாமல் வீட்டை விட்டு சென்றுவிட்டாரா ? […]

You May Like